இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக கூறி மலையாள நடிகை வணங்கான் படப்பிடிப்பில் இருந்து வெளியேறி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அது மட்டும் படைப்பில் பாலா அவர்கள் சினிமா உலகில் இயக்குனராக ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று உள்ளார்.

பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால், இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும். மேலும், இவருடைய படத்தில் ஹீரோனா— ஆக்ஷன்,மாஸ்; ஹீரோயினினா– அழகாகவும்,வெள்ளையாகவும் சினிமாவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது மட்டும் இல்லாமல் பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேற கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா.

Advertisement

இயக்குனர் பாலா திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் பாலா அவர்கள் இயக்கும் படங்கள் எல்லாம் அதிகமான பட்ஜெட் படங்கள் கிடையாது. சராசரி மனிதனின் அடிப்படை தேவையை உணர்த்தும் கருத்து படம் ஆகும். இடையில் இவர் விஜய் வர்மா என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால், அந்த படம் எடுப்பதில் பல பிரச்சனைகள் எழுந்தது. இதை அடுத்து இவர் நான்காண்டுகளுக்கு மேலாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வணங்கான் என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.

வணங்கான் படம்:

முதலில் இந்த படத்தில் கதாநாயகனாக சூர்யா கமிட் ஆகி இருந்தார். இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தினுடைய சூட்டிங் ஒரு மாதம் நடைபெற்ற நிலையில் திடீரென்று இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார். அதற்கு பிறகு தான் இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் கமிட் ஆகியிருந்தார். மேலும், சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதற்கு காரணம் சூர்யாவை பாலா அடித்து விட்டதாகவும், இன்னும் வேறு தகவல்களையும் கூறியிருந்தார்கள். ஆனால், இது குறித்து பாலா- சூர்யா இருவருமே விளக்கம் கொடுக்கவில்லை.

Advertisement

விலகிய நடிகை :

தற்போது இந்த படத்தினுடைய இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நடைபெற்று வரவேற்பு பெற்று இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

மமிதா பைஜு :

இந்த நிலையில் வணங்கான் படத்தில் இருந்து நடிகை விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சூர்யா இந்த படத்தில் நடித்த போது அவருடன் இணைந்து நடித்தவர் மலையாள நடிகை மமிதா பைஜு. இவர் ஒரு சீனுக்கு மூன்று டேக் வாங்கி இருந்தார். இதனால் கடுப்பான பாலா கோபத்தில் அவரை அடித்து விட்டாராம். சூர்யா வெளியேறிய போது மம்தாவும் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். தற்போது இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து சூர்யாவையும் பாலா இப்படி அடித்திருப்பதால் தான் விலகி இருப்பார் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்

Advertisement