தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. ஆனால், மொத்த சீரியல் இயக்குனர்களையும் குத்தகைக்கு எடுத்தது போல சன் தொலைக்காட்சி தான் அதிகப்படியான சீரியல் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி தொடர் இல்லதரிசிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து அவரே தயாரித்த இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது. 

இந்த தொடரில் வாணி மகன் கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவிற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் நடித்திருந்தனர். அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் தான் தேனு. இவருடைய உண்மையான பெயர் நேஹா, மார்ச் 14 ஆம் தேதி 2002 பிறந்தார் இவர் கேரள மாநிலம் சாலக்குடியை பூர்விகமாக கொண்டவர். பிறந்தது கேரளவாக இருந்தலும் வரழ்ந்த்து எல்லாம் சென்னையில் தான். தந்தை மூலம் தான் சீரியலில் நுழைந்தார்.

இதையும் பாருங்க : பல வருடங்களுக்கு பின்னர் அவரை சந்திச்ச போது அவர் கேட்ட கேள்வி எனக்கு ஷாக்கா இருந்துச்சி – ரம்யா

Advertisement

இவர் தமிழில் பைரவி என்ற சீரியலில் தான் முதன் முதலில் நடித்திருந்தார். அதன் பின்னர் பிள்ளை நிலா, வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், தி எல்லோ பெஸ்டிவல் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். சீரியல் மட்டுமல்லாது பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நேகா சிபிராஜ் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஜாக்சன் துரை என்ற படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

மேலும், ஆர்யா நடித்த யட்சன் படத்திலும் நடித்துள்ளார் சமீபத்தில் தொலைக்காட்சி நடத்திய சன் குடும்ப விருதுகள் இல் நேகா கலந்துகொண்டிருந்தார் வாணி ராணி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக பார்த்த நேகா தற்போது வளர்ந்து இளம் நடிகையை போல மாறி உள்ளதை பார்த்து பலரும் வியந்து போயிருக்கிறார்கள. மேலும், இந்த விழாவில் கலந்து கொண்டநேஹா, சித்தி 2 தொடரில் தனது கதாபாத்திரம் குறித்தும் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement