சூப்பர் ஹிட் படங்களை தவற விட்டதற்கான காரணமான நபர் குறித்து வரலட்சுமி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலக்ஷ்மி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் வரலக்ஷ்மி. அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து இருந்தார்.

அதிலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் ,விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் இரவின் நிழல். பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் எதிர்பார்புகளுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

Advertisement

வரலக்ஷ்மி திரைப்பயணம்:

இந்த திரைப்படத்திற்கு பின்னர் வரலக்ஷ்மி நடிப்பில் வெளியாகியிருந்த படம் காட்டேரி. ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் யசோதா. இந்த படத்தில் வில்லியாக வரலட்சுமி மிரட்டி இருந்தார். இந்த படத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

வரலக்ஷ்மி நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து வரலட்சுமி அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது வரலக்ஷ்மி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கொன்றால் பாவம். இந்த படத்தை தயாள் பத்மநாபன் இயக்கி இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

வரலட்சுமி அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவரிடம் தொகுப்பாளர் தவறவிட்ட படம் குறித்து கேட்டிருக்கிறார். அதற்கு வரலட்சுமி, முதலில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் ஜெனிலியா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்திற்கு முதலில் என்னை தான் சங்கர் சார் கேட்டிருந்தார். அந்த படத்திற்கான டெஸ்ட் சூட்டிங் நடந்தது. ஆனால், அப்பா நடிக்க விடவில்லை.

Advertisement

தவற விட்ட படங்கள்:

அதற்குப் பிறகு பரத் நடித்த காதல் படத்தில் (இந்த படத்தை ஷங்கர் தான் தயாரித்து இருந்தார்) ஐஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போதும் அப்பா நடிக்க விடல. அதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சரோஜா படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. அதற்கும் அப்பா விடவில்லை. அந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது என்று கூறுகிறார்.

Advertisement