ஏற்கனவே திருமணமாகி 15 வயது மகளுக்கு தந்தையாக இருக்கும் நபரை திருமணம் செய்துகொள்ள இருப்பது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார் வரலக்ஷ்மி. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலக்ஷ்மி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் வரலக்ஷ்மி. அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து இருந்தார்.

மேலும், இவருடைய நடிப்பில் இந்த கடந்த தமிழில் வி3, கன்னித்தீவு, கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்கள் வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் வீரசிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஏஜென்ட் கோட்டபொம்மாளி போன்ற படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த படங்கள் எதுவுமே இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெயரை எடுத்து தரவில்லை. அடுத்த வருடம் இவர் பல படங்களில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் வரலக்ஷ்மிக்கு திடீர் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. நிக்கோலை சச்தேவ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. கடந்த மார்ச் 1ஆம் தேதி, நடந்த இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டு இருக்கின்றனர். வரலக்ஷ்மியை நிச்சயம் முடித்த நிக்கோலை சச்தேவ் ஒரு gallarist , இவர் Gallery 7 என்ற கண்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

வரலக்ஷ்மியையும் நிக்கோலை சச்தேவ்வும் 14 ஆண்டுகள் பழகி வந்துள்ளனர். தற்போது இரு வீட்டார் சம்மத்ததுடன் மீகவும் எளிமையாக நிச்சயதார்தம் முடிந்துள்ளது. மேலும், இவர் திருமணம் இந்த ஆண்டே நடைபெற இருப்பதாவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வரலக்ஷ்மி திருமணம் செய்ய இருக்கும் நிக்கோலைக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement

இவருக்கு ஏற்கனவே கவிதா என்ற மாடல் அழகியுடன் திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகளே இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இவரது மனைவி கவிதா Mrs Gladrags 2010 என்ற பட்டத்தையும் கலிபோர்னியாவில் 2007ஆம் ஆண்டு Mrs Globe 2011 என்ற அழகி போட்டியில் இரண்டாம் இடத்தையும் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தனது 24 வயதில் நிக்கோலையை திருமணம் செய்துள்ளார்.

Advertisement

2009 ஆம் ஆண்டு திருமணம் ஆன அடுத்த ஆண்டே இவருக்கு காஷா என்ற மகளும் பிறந்துள்ளார். இவரது மகள் இளம் வயது வலு தூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்று இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில சில ஆண்டுகளுக்கு முன்னரே கவிதாவை பிரிந்து இருக்கிறார் நிக்கோலை. இப்படி ஒரு நிலையில் ஏற்கனவே விவகாரத்து ஆனவரை வரலக்ஷ்மி திருமணம் செய்துகொள்வதற்கு விமர்சனங்கள் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் சூசக பதிவு ஒன்றை போட்டுள்ளார் வரலக்ஷ்மி.

அதில் ‘மற்றவர்கள் என்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்று நான் எப்போதுமே… கவலைப்படமாட்டேன்.  இப்படித்தான் பெண்கள் எப்பவும் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும். உங்களுக்காக வாழுங்கள். நீ இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்கிறவர்கள் யாரும் உங்கள் வாழ்க்கை முழுதும் வரப்போவது இல்லை நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துணையாக நிற்பீர்கள்’ என்று கூறிபிட்டுள்ளார்.

Advertisement