தன்னைக் குறித்து சோசியல் மீடியாவில் வரும் வதந்திகளுக்கு வரலட்சுமி சரத்குமார் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலக்ஷ்மி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் தான் இவர் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து இருக்கிறார்.

மேலும், இவருடைய நடிப்பில் மட்டும் கடந்த ஆண்டு வி3, கன்னித்தீவு, கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்கள் வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் போன்ற வீரசிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஏஜென்ட் கோட்டபொம்மாளி போன்ற படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த படங்கள் எதுவுமே இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெயரை எடுத்து தரவில்லை. அடுத்த வருடம் இவர் பல படங்களில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

வரலக்ஷ்மி நிச்சயதார்த்தம்:

இப்படி ஒரு நிலையில் வரலக்ஷ்மிக்கும் நிக்கோலை சச்தேவ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. கடந்த மார்ச் 1ஆம் தேதி நடந்த இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டு இருக்கின்றனர். வரலக்ஷ்மியை நிச்சயம் முடித்த நிக்கோலை சச்தேவ் ஒரு gallarist , இவர் Gallery 7 என்ற கண்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும், வரலக்ஷ்மியையும் நிக்கோலை சச்தேவ்வும் 14 ஆண்டுகள் பழகி வந்துள்ளனர். தற்போது இரு வீட்டார் சம்மத்ததுடன் மீகவும் எளிமையாக நிச்சயதார்தம் முடிந்துள்ளது.

நிக்கோலை குறித்த தகவல்:

ஏற்கனவே நிக்கோலைவிற்கு கவிதா என்ற மாடல் அழகியுடன் திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகளே இருக்கின்றார். இவரது மகள் இளம் வயது வலு தூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்று இருக்கிறார். பின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே கவிதாவை பிரிந்து இருக்கிறார் நிக்கோலை. தற்போது விவகாரத்து ஆனவரை தான் வரலக்ஷ்மி திருமணம் செய்துகொள்ள இருக்கிறது. இதை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் விமர்சித்து வந்தார்கள்.

Advertisement

வரலக்ஷ்மி டீவ்ட்:

இதற்கு வரலக்ஷ்மி, மற்றவர்கள் என்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்று நான் எப்போதுமே கவலைப்படமாட்டேன். இப்படித்தான் பெண்கள் எப்பவும் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும். யாரும் உங்கள் வாழ்க்கை முழுதும் வரப்போவது இல்லை நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துணையாக நிற்பீர்கள் என்று கூறி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருப்பதாக சில செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Advertisement

வரலக்ஷ்மி பதிலடி:

இதன் காரணமாக தான் சரத்குமார் பாஜகவில் இணைந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையை இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரலட்சுமி சரத்குமார், மீடியாக்கள் உண்மை தன்மையை ஆராய்ந்து சரியான செய்தியை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னைப் பற்றிய பொய்யான செய்திகள் வெளியாகி வருவதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். பிரபலங்கள் குறித்த தவறான செய்திகள் சமீப காலமாக அதிக அளவில் குவிந்து வருகின்றது. என்னை பற்றி வெளியாகிருக்கும் செய்தி அனைத்தும் முற்றிலும் பொய்யானது. நாட்டில் முக்கியமான பிரச்சனைகள் ஆயிரம் இருக்கிறது. மீடியாக்கள் அதையெல்லாம் கவனிக்கலாம். அதை விட்டுவிட்டு சினிமா பிரபலங்களை கவர் செய்வது ஏன்? என்று கோபத்தில் கொந்தளித்து பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement