தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் குறித்து நடிகை அளித்து உள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலக்ஷ்மி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா விக்னேஷ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் வரலக்ஷ்மி. அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து இருந்தார்.

அதிலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் ,விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் இரவின் நிழல். பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் எதிர்பார்புகளுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

Advertisement

வரலக்ஷ்மி திரைப்பயணம்:

இந்த திரைப்படத்திற்கு பின்னர் வரலக்ஷ்மி நடிப்பில் வெளியாகியிருந்த படம் காட்டேரி. ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் யசோதா. இந்த படத்தில் வில்லியாக வரலட்சுமி மிரட்டி இருந்தார். இந்த படத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

வரலக்ஷ்மி நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து வரலட்சுமி அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது வரலக்ஷ்மி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கொன்றால் பாவம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிக்காக வரலட்சுமி சரத்குமார் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கூறியிருந்தது, ஒரு ஷோக்காக என் வீட்டிற்கு பேச வந்திருந்தார்கள். நிகழ்ச்சியை பற்றி எல்லாம் பேசி முடிந்தவுடன் அவர் என்னிடம் மத்த விஷயங்களைப் பற்றி எப்போது பேசுவது என்று சொன்னார்.

Advertisement

வரலக்ஷ்மி அளித்த பேட்டி:

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர் மற்ற விஷயத்துக்காக ஓட்டல் போடணுமா என்று கேட்டார். எனக்கு செம கோவம் வந்தது. இதை நான் என் நண்பர்களிடம் சொல்லும்போது நீ அமைதியாக இருந்தாயா? அவனை அடிக்க வில்லையா? என்று சொன்னார்கள். இதை என்னிடம் யார் கேட்டிருந்தாலும் முதலில் நான் பளார் என்று அறைந்திருப்பேன். அப்போது நான் யோசித்தேன்.

Advertisement

சினிமா பேக்ரவுண்டில் இருந்து வந்த என்னையே அவன் இப்படி கேட்கிறான் என்றால்? ஒரு சாதாரண பெண்களிடம் எப்படி நடந்து கொள்வான் என்று யோசித்து தயவு செய்து நீங்க கிளம்பி விடுங்கள் என்று சொன்னேன். அவரு உடனே, நீங்க நல்ல மூடில் இல்லை. கோபமாக இருக்கிறீர்கள். அப்புறமாக பேசுகிறான் என்று சொன்னான். என்னையா இவன்? இவன வெளியில் முதல்ல கூட்டிட்டு போங்க என்று சொன்னேன் என்று கூறினார்.

Advertisement