விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்தை தொடர்ந்து ‘str47’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது GVM – STR கூட்டணி. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைக்க இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் கௌதம் மேனன் பிறந்தநாளில் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அப்போது  ‘நதிகளிலே நீராடும் சூரியன்’  என்று தான் டைட்டில் வைத்தனர். ஆனால், இந்த டைட்டில் கொஞ்சம் ட்ரோல்களுக்கு உள்ளாகி இருந்தது.

இதனால் இந்த படத்தின் டைட்டிலை ‘வெந்து தணிந்த காடு’ என்று மாற்றி நேற்று இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் சிம்பு தானாம். அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின்னர் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2 ‘ படம் எடுக்க திட்டமிடபட்டிருந்தது.ஆனால், அந்த திரைப்படத்தின் பணிகள் துவங்குவதற்குள் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் – சிம்பு – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஒரு படம் உருவாக திட்டமிடபட்டுவிட்டது.

Advertisement

அது தான்  ‘நதிகளிலே நீராடும் சூரியன்’. இப்படி ஒரு கெளதம் மேனனிடம் தனுஷின் ‘அசுரன்’ போல கனமான கதைக்களம் கொண்ட படம் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார்.இதனால் ஜெயமோகனின் ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ என்ற கதையை படமாக்கும் உரிமையை வாங்கி அதற்கான பணிகளில் ஈடுபட்டார் கெளதம் மேனன். அந்த படம் தான் இந்த ‘வெந்து தணிந்த காடு’.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் இருந்து சில புகைப்படங்கள் லீக் ஆகி இருக்கிறது. அதில் மாஸாக ராயில் என்பீல்ட் பைக்கில் வலம் வருகிறார் சிம்பு. இதை பார்த்த நெட்சண்கள் பலரும் இந்த பைக்க தலைவன் கௌதம் மேனன் விடலயா ? இது கிராம படம் தானே என்று கேலி செய்து வருகின்றனர். பொதுவாக கெளதம் மேனன் படங்கள் என்றாலே மிடில் கிளாஸ் ஹீரோ உயர் ரக பைக், அசால்ட்டாக வெளிநாடு பயணம் இவையெல்லாம் செய்வது வழக்கமான ஒன்று தானே பாஸ்.

Advertisement
Advertisement