மங்காத்தா 2 விரைவில் உருவாகும் என்று நிகழ்ச்சி ஒன்றில் வெங்கட்பிரபு கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும், இயக்குனருமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் வெங்கட் பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார்.

அதன் பின்னர் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் “சென்னை 28” என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து இவர் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி,சென்னை 28-2 போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். அதிலும் இவர் இயக்கிய மங்காத்தா படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இன்னும் இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் வெப்சீரிஸ் கூட இயக்கி இருக்கிறார்.

Advertisement

மாநாடு படம் பற்றிய தகவல்:

மேலும், சமீபத்தில் இவர் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. சமீப காலமாக தோல்வியை சந்தித்து வந்த சிம்புவிற்கு மாநாடு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்திருக்கிறது. இந்த படத்தில் டைம் லூப் என்ற ஒரு படத்தில் கான்செப்ட்டை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

வெங்கட் பிரபு இயக்கிய படங்கள்:

அதோடு திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு இரண்டையுமே கொண்ட படமாக மாநாடு அமைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தற்போது வெளியாகி இருந்த படம் மன்மதலீலை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு தான் வெற்றியை கண்டது. தற்போது வெங்கட்பிரபு, நாக சைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படி வெங்கட்பிரபு படங்களில் பிசியாக இருந்தாலும் அவரிடம் கேட்கும் ஒரே கேள்வி மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று தான்.

Advertisement

மங்காத்தா 2 குறித்த கேள்வி:

இவரிடம் பல பேட்டிகளில் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பல கேள்விகள் எழுப்பி இருந்தார்கள். இது தொடர்பாக ஏற்கனவே வெங்கட்பிரபு பேட்டியில், மங்காத்தா இரண்டாம் பாகத்துக்கான கதையை அஜித்திடம் கூறி இருக்கிறேன். அவர் எப்போது வந்தாலும் உடனே அந்த படத்தை எடுக்கத் தொடங்குவேன் என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெங்கட்பிரபு மங்காத்தா 2 குறித்து தகவலை வெளியிட்டிருக்கிறார்.

Advertisement

மங்காத்தா 2 குறித்து வெங்கட் பிரபு அளித்த பேட்டி:

அது என்னவென்றால், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் சிறப்பான கதையை தயார் செய்து வைத்துள்ளேன். அதோடு அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து மங்காத்தா 2 படத்தை எடுக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன். இந்த கதையை அவர்கள் இருவரிடத்திலும் கூறிவிட்டேன். மங்காத்தா 2 படம் விரைவில் உருவாகும் என்று தான் நம்புவதாக தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Advertisement