தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷ்யாம் போன்ற பலர் நடித்து இருந்தார்கள்.

தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணியை மையமாக கொண்ட கதை. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது.மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார்.

Advertisement

இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது சென்னையில் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற பெரும் கேள்வி எழுந்தது. விஜய்யின் 68வது படத்தை தெலுங்கு இயக்குனர் இயக்கப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது விஜய் 68 படத்தை இயக்கும் வாய்ப்பை வெங்கட் பிரபு பெற்று இருக்கிறார்.

Advertisement

இந்தப் படம் ஏஜிஎஸ்ஸின் 25வது படம் எனவும் சர்வதேச தரத்துடன் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். புதிய கீதை படத்துக்கு பிறகு இந்தப் படத்துக்காக விஜய்யுடன் யுவன் இணையவிருக்கிறார். இதனால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் விஜய்யுடன் 10 மாதங்களுக்கு முன்னர் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு.

Advertisement

அதில் ‘ என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி விஜய் அண்ணா. சொன்ன மாதிரியே பட அறிவிப்புக்கு பின்னர் தான் போட்டோவை ஷேர் செய்தேன். கன்வு மெய்யான தருணம்’ என்று பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபு தமிழில் இறுதியாக இயக்கிய மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கில் நாக சைத்னயாவை வைத்து ‘கஸ்டடி’ படத்தை இயக்கி இருந்தார். சமீபத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement