பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றிருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் போன்ற பல்வேறு தொடர்களில் நடித்தவர் சீரியல் நடிகர் வேணு அரவிந்த். மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி ஆகிய நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

சமீபத்தில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். கொரோனா தொற்றில் இருந்து இவர் குணமடைந்த சில நாட்களிலேயே இவருக்கு நிமோனியா வந்துள்ளது. மேலும், இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கு மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்து உள்ளனர்.

இதையும் பாருங்க : கமல் தலைமையில் காதலிக்கு தாலி கட்டிய சினேகன் – எக்ஸ்குளுசிவ் திருமண வீடியோ இதோ

Advertisement

இதை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை அகற்றியுள்ளனர். கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாலும் தற்போது வேணு கோமா நிலைக்கு இப்படி ஒரு நிலையில் தனது நண்பருக்காக உதவி கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ட்வீட் போட்டுள்ளார் நீங்கள் கேட்ட பாடல்கள் விஜயசாரதி.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வேணு அரவிந்தின் புகைப்படத்துடன் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘நம் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு வேணு அரவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் இருக்கிறார் தற்போது அவர் பெரும் எந்தவிதமான உதவியாக இருந்தாலும் அது உதவியாக இருக்கும் தயவுகூர்ந்து அவருக்கு உதவி செய்ய ஆவன செய்து அவரை காப்பாற்றுங்கள் ஐயா என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்’ என்று உருக்கமுடன் பதிவு செய்கிறார்

Advertisement
Advertisement