தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் வெளிவந்த ஒரு சில படங்கள் உணர்வுப்பூர்வமாக மக்கள் மனதை விட்டு நீங்காமல் அப்படியே இருக்கிறது. அந்த படங்களில் நடித்த சில நடிகர்கள் இன்னும் மக்கள் மனதில் நீங்காமல் அதே அந்தஸ்தைப் பெற்று உள்ளார்கள். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாகி இன்று வரை நீங்காத இடம் பிடித்திருக்க படங்களுள் ஒன்று தான் முதல் மரியாதை. இயக்கத்தில் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘முதல் மரியாதை’. இந்த படத்தை பாரதிராஜா அவர்கள் தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் சிவாஜி கணேசன், ராதா, சத்யராஜ், வடிவுகரசி, தீபன், ரஞ்சினி, ஜனகராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க கிராமப்புற பின்னணியை மையமாக கொண்ட கதை. இளையராஜாவின் இசையும், வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய செய்தது. இந்த படம் நடிகர் திலகத்தின் கடைசி வெற்றி விழா படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்த படத்தில் செல்லக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தீபன். இவருக்கு இது தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தீபன் வேறு யாரும் இல்லை மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆரின் மருமகன். அதாவது ஜானகி எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன். ஆனால், இந்த படத்தில் தீபன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் தேர்வானது நடிகர் விக்னேஷ் தான்.

ஆனால், இந்த படம் வெளியாகி 7 ஆண்டுகளுக்கு பின்னர் தான் சின்னதாயி என்ற படத்தின் மூலம் நடிகராகவே அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். இறுதியாக ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்து இருந்தார்.

Advertisement

அதே போல தீபன், முதல் மரியாதை படத்துக்கு பின்னர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. 36 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு வெளியான C/O காதல் படத்தில் தான் மீண்டும் நடித்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தனது ரீ – என்ட்ரி குறித்து பேசிய தீபன் முதல் மரியாதைக்கு பின் நான் நடித்த படங்கள் எம்.ஜி.ஆருக்கே பிடிக்கவில்லை. அவர் தயாரிப்பில் நடிக்க வைப்பதாக சொன்னார்.

Advertisement

ஆனால் அதன் பின்னர் அவர் உடல்நலம் குன்றிவிட்டது. எம்.ஜி.ஆர் அனுமதியுடன் தான் நடிக்க வந்தேன். மற்றபடி எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. இந்த படத்துக்கு கிடைத்த பாராட்டுகள் உற்சாகம் அளிக்கிறது. தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்’ என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement