தன்னுடைய மருமகள் நயன்தாரா குறித்து மனம் திறந்து விக்னேஷ் சிவனின் அம்மா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும், சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

Advertisement

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

இந்த படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று இருந்தார்கள். அதன் பின் இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

நயன்-விக்கி இரட்டை குழந்தை:

இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். ஆனால், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வியும் எழுப்பி இருந்தார்கள். இது குறித்து கடந்த மாதம் முழுவதும் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது.

Advertisement

விக்னேஷ் சிவன் அம்மா அளித்த பேட்டி:

அதற்குப் பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் தரப்பில் உரிய ஆதாரங்களை மருத்துவரிடம் சமர்ப்பித்து இருந்தார்கள். தற்போது அந்த சர்ச்சை முடிந்து இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய மருமகள் குறித்து விக்னேஷ் சிவன் அம்மா அளித்திருக்கும் பேட்டி வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் அவர், என்னுடைய மருமகள் நயன்தாரா. அவர் நடிகை என்பதை தாண்டி ஒரு சிறந்த உள்ளம் கொண்டவர். அவர் வீட்டில் மொத்தம் எட்டு பேர் வேலை செய்கிறார்கள். நான்கு பேர் பெண்கள், நான்கு பேர் ஆண்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றாலும் அவர் கை கொடுப்பார். அப்படித்தான் ஒரு பெண் கவலையாக இருந்தால், ஏனம்மா உங்களுக்கு என்ன ஆனது? என்று நயன்தாரா கேட்டார்.

Advertisement

நயன் குறித்து சொன்னது:

அதற்கு அவர், எனக்கு 4 லட்சம் கடன் இருக்கிறது. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று அழுது இருக்கிறார். உடனே நயன்தாரா அவர்களுடைய கடனை தீர்த்து சந்தோசமாக இருங்கள் என்று சொன்னார். இப்படி அவர் நடிகை என்பதை தாண்டி பிறருடைய கஷ்டத்தையும் புரிந்து கொள்ளக் கூடியவர். அதேபோல நயன்தாராவின் அம்மா கேரளாவில் இருக்கிறார். அவரும் பிறருக்கு கஷ்டம் என்றால் உதவிகளை செய்து இருக்கிறார். ஒருமுறை வேலை பார்க்கும் பெண்ணின் வீட்டில் கஷ்டம் என்று சொன்னவுடனே தன் கைகளில் போட்டிருந்த தங்க வளையல்களை கழட்டி கொடுத்து விட்டார். இப்படி வேலை செய்யும் இடத்தில் நம்பிக்கையோடு நேர்மையாக இருந்தால் நம்முடைய பிரச்சனைகளை அவர்களே தீர்த்து வைப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement