நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தை நடத்திய புரோகிதர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக இருந்தவர்கள் நயன்-விக்கி. இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த விஷயமாக இருந்தது.

அனைவரும் எதிர்பார்த்த படி நயன்-விக்கி திருமண விழா சமீபத்தில் தான் மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கி இருந்தது. அந்த விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் விழாவில் உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். அதுமட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று இருந்தது. அதே போல் வந்தவர்களுக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டிருந்தது.

Advertisement

விக்கி-நயன் திருமணம்:

பின் அடுத்த நாள் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. கடற்கரை ஓரம் திறந்தவெளியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் காலை 9 மணி முதல் இந்து பாரம்பரிய முறைப்படி மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டி இருந்தார்.

திருமண உடைகள் குறித்த தகவல்:

இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். இவர்களுடைய திருமண உடைகள் புகழ்பெற்ற ஜேட் குழுமத்தால் நவீன உடைகள் ஏற்றவாறு பாரம்பரியம் சற்றும் குறையாத வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. நடிகை நயன்தாரா சிவப்பு நிற புடவை, விக்னேஷ் சிவன் வேஷ்டி குர்த்தி மற்றும் சால்வை ஒன்றை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

நயன்-விக்கி ஹனிமூன்:

மேலும், திருமணம் முடிந்த கையுடன் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருப்பதிக்கு சென்றிருந்தார்கள். அங்கு இவர்கள் காலணியுடன் சென்று போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்கள். இது சோசியல் மீடியாவில் நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பின் நயன்-விக்கி பேட்டி அளித்து இருந்தார்கள். அதை அடுத்து இவர்கள் கேரளா சென்று இருந்தார்கள். ஜூலை முதல் படத்தில் கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்து இருந்தார்கள். தற்போது இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்த் சென்றிருக்கிறார்கள்.

Advertisement

புரோகிதர் வாங்கிய சம்பளம்:

இந்த நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வந்த புரோகிதர்களுக்கு கொடுத்த சம்பளம் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்தில் 5 புரோகிதர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஒரு புரோகிதருக்கு 5 லட்சம் வீதம் மொத்தம் ஐந்து புரோகிதர்களுக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து கொஞ்ச நேர வேலைக்கு இவ்வளவு சம்பளமா! என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் கேட்டு வருகிறார்கள்.

Advertisement