நீ என் உலக அழகியே.! மகளீர் தினத்தன்று நயனுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?

By Rajkumar · 8/3/2019

தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. 

https://www.instagram.com/p/BuvUufjg-cu/

ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர். அதே போல இருவரும் மாறி மாறி தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், நயன்தாராவுடன் திருமணம் என்று விக்னேஷ் சிவனிடம் கேட்ட போது, இன்னும் தெரியலயே, தெரிந்தது என்றால் சொல்லலாம் தெரியாத விஷத்தை பற்றி கேட்டால் என்ன சொல்வது. என் கல்யாணத்த பத்தி என்னோட அம்மாகிட்ட கேட்டு உங்களுக்கு சொல்றேன் என்று மழுப்பலான ஒரு பதிலைதான் அளித்திருந்தார்.

ஆனால், நயன்தாரா 100 படங்களில் நடித்த பின்தான் திருமணம் என்று கூறி வருகிறாராம். இந்த நிலையில்
இன்று (மார்ச் 8) மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகை நயன்தாராவிற்கு அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

நயன்தாராவிற்கு விதவிதமான பூக்கள் வாங்கி கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், அன்ஹா புகைப்படத்தை பதிவிட்டு, "நீ என் உலக அழகியே.. உனை போல இல்லை ஒருத்தியே" என்று கவிதை பாடியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full