இழப்பு, நண்பனின் கனவு, கதிர்.! இது தான் தளபதி 63 யின் கதையா.!

By Rajkumar · 28/3/2019

நடிகர் விஜய் தற்போது அட்லியின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, கதிர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு காபந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக கொண்ட கதையாக இருக்கும் என்றும் ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த படத்தின் கதையும் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வந்த தகவலின்படி, இந்த படம் கால்பந்து விளையாட்டை மட்டும் மையப்படுத்திய கதை இல்லை. இந்தப் நபடம் ண்பனுக்காக பழிவாங்கும் ஒரு கதை ஆகும். இந்த படத்தில் விஜய் மற்றும் கதிர் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்களாம் அவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில் நண்பர்களாக இருந்து வருவார்களாம். அவர்களது லட்சியமே உலகத்தரம் வாய்ந்த ஒரு கால்பந்து வீரராக வரவேண்டும் என்பது தான்.

ஆனால், இருவருமே பின்னர் ஒரு கால்பந்து பயிற்சியாளராக மாறிவிடுகின்றனர். ஒரு கட்டத்தில் கதிர் ஒரு கால்பந்து போட்டியின்போது கொல்லப்படுகிறார். ஆனால், அவர் இயற்கையாக மரணிக்கவில்லை என்று விஜய் அறியவே, அவரது மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடித்து கதிர் வழிநடத்தி வந்த கால்பந்து அணியையும் எப்படி வெற்றி பெறச் செய்கிறார் என்பதுதான் கதைக்கரு. சொல்லப்போனால் நண்பனுக்காக அவரது கனவை எப்படி விஜய் நினைக்கிறார் என்பது தான் இந்த படத்தின் மையக்கரு.

Tamil Behind Talkies AMP · Quick view
View full