மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற விஜய் - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.

By ·

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ்பாபு சமீபத்தில் ஸ்பைடர் என்ற படத்தின் மூலம் தமிழில் நேரடி கதாநாயகனாக களமிறங்கினார். 1979 ல் தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேஷ் பாபு, தற்போது தெலுங்கு சினிமா துறையில் பிரின்ஸ் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவரது படங்கள் என்றாலே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

சமீபத்தில் நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளை இருந்தார். இதற்கு பல்வேறு பிரபலங்களும் மகேஷ் பாபுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மகேஷ் பாபு நன்றிகளை தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் மகேஷ் பாபு நடிகர் விஜய்க்கு தனது ட்விட்டர் பக்கத்தில் சவால் கொடுத்திருக்கிறார்.

அது என்னவெனில் தனது பிறந்தநாளுக்கு மரக்கன்று ஒன்றை நட்டிருந்தார் மகேஷ் பாபு. இதுகுறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்த மகேஷ் பாபு, பிறந்த நாளைக் கொண்டாட இதை விட சிறந்த வழி இருக்கிறதா என்ன. கிரீன் இந்தியா சேலஞ். இதை நான் ஜூனியர் என்டிஆர், நடிகர் விஜய், நடிகை சுருதிஹாசன் போன்றவர்களுக்கு கொடுக்கிறேன். இந்த சங்கிலி எல்லைகளை கடந்து தொடரட்டும். அனைவரும் இதை ஆதரிக்க நான் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கில்லி, போக்கிரி போன்ற படங்கள் இவர் நடித்த படங்களிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்கள் தான். எனவே, மகேஷ் பாபுவின் இந்த சவாலை விஜய் ஏற்பாரா இல்லையா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில்

Tamil Behind Talkies AMP · Quick view
View full