தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர். இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன் சமையல் விற்பனை என 72 வேலைகளை செய்து உள்ளார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின் இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார். சமீபத்தில் இயக்குனர் மிஸ்கின் அவர்கள் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான யூத் படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, நான் முதன் முதலாக கதிர் அவர்களிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார்.

Advertisement

ஒரு கதை எப்படி சொல்லணும் என்பதை அவர் தான் எனக்கு சொல்லித் தந்தார். முதல் படத்திலேயே கோ-டைரக்டர் என்ற பதவியைத் தந்தது வின்சென்ட் செல்வா தான். இவர்கள் இருவரையும் என் வாழ்க்கையில் மறக்க முடியாது. சினிமாவில் நுழைந்த காலத்தில் எல்லா வேலைகளையும் நானே செய்வேன். அந்த அளவிற்கு சினிமா மீது எனக்கு ஆர்வம். வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த யூத் படம் மூலம் தான் நான் சினிமா உலகிற்கு நுழைந்தேன். இது தான் என்னுடைய முதல் படம் . இந்த படத்தில் வாலி அவர்கள் பாட்டு ஒண்ணு எழுதி இருந்தார்.

இதையும் பாருங்க : சர்ச்சையான முறையில் பிறந்தநாள் கொண்டாட்டம். கன்னட நடிகர் துனியா விஜய்க்கு நோடீஸ் அனுப்பிய போலீஸ்.

எனக்கு அந்த பாட்டு புடிக்கல. உடனே நான் இயக்குனரிடம்சொன்னேன். ஆனால், அவர் இது உனக்கு முதல் படம் தானே, போய் உட்காருன்னு சொன்னாரு. பின் நான் தயாரிப்பாளர் இடம் கூட சொன்னேன். அவரும் காதில் வாங்கி கொள்ளவில்லை. பின் நான் என்னுடைய நண்பன் கபிலனை வைத்து ஒரு பாட்டு எழுதினேன். பிறகு பாட்டு ரெகார்டிங் செய்ய ரெடி பண்ண சொன்னார்கள். அப்ப நான் உள்ளே போய் வாலி எழுதின பாட்டு பேப்பர் எடுத்துட்டு என் நண்பன் எழுதின பேப்பரை வைத்துட்டேன்.

Advertisement

நான் பேப்பர் மாத்தி வைத்த விஷயம் யாருக்கும் தெரியாது. அப்பவே நான் முதல் படத்தில் அவ்ளோ பிராடு வேலை செய்தேன். அப்புறம் அந்த பாடலை இயக்குனரும், தயாரிப்பாளரும் கேட்டு ஷாக் ஆயிட்டார்கள். பிறகு அதை கேட்டுட்டு தயாரிப்பாளர் பயங்கரமாக திட்டினாரு. அந்த பாட்டு தான் யூத் படத்தின் “ஆள் தோட்ட பூபதி”. அந்த பாட்டு வெளிவந்து பெரிய அளவு பிளாக்பஸ்டர் அடித்தது. அந்த படமும் ஹிட் தான். அப்புறம் என்னை கூப்பிட்டு இயக்குனரும், தயாரிப்பாளரும் பாராட்டினார்கள் என்று கூறினார்.

வீடியோவில் 11 நிமிடத்திற்கு மேல் பார்க்கவும்

Advertisement

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சைக்கோ’. இந்த படத்தில் நித்யா மேனன், அதிதிராவ், ராம் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மிஷ்கினின் சைக்கோ படம் படு பயங்கரமாக ரசிகர்களை மிரட்டும் வகையில் இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திலும் எக்ஸ்ட்ரீம் கொலைக் காட்சிகள் ரசிகர்களை கதி கலங்க வைக்க உள்ளன என்றும் கூறப்படுகிறது. கண் தெரியாத நபராக உதயநிதி ஸ்டாலின் நடித்து உள்ளார். சைக்கோ படம் நாளை திரைக்கு வருகிறது.

Advertisement