'TVK ஒழிக, கடவுளே அஜித்தே' திரையரங்கு முன்பு மோதிக்கொண்ட விஜய்-அஜித் ரசிகர்கள், வைரலாகும் வீடியோ
விடாமுயற்சி படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்களை அஜித் ரசிகர்கள் தாக்கி இருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் முதலில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போனது.
விடாமுயற்சி படம்:
நேற்று அனைவரும் எதிர்பார்த்த அஜித்தின் விடாமுயற்சி படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. திரையரங்குகளில் ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று விடாமுயற்சி படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.40 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் ரூ.30 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது.
படம் குறித்த தகவல்:
இனி வரும் நாட்களில் விடாமுயற்சி படம் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆரவாரத்துடன் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தை கொண்டாடி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் எல்லா திரையரங்களிலுமே திருவிழா போல ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் திருநெல்வேலியில் புகழ்பெற்ற ராம் சினிமாஸில் விடாமுயற்சி படம் திரையிடப்பட்டிருக்கிறது. இங்கு அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை தாக்கியிருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்-அஜித் ரசிகர்கள் செய்தது:
அதாவது, படம் பார்க்க ரசிகர்கள் எல்லோருமே திரையரங்கு வெளியே வரிசையாக நின்று கொண்டு இருக்கிறார்கள். அப்போது விஜய் ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை பிடித்தபடி கூட்டத்தின் முன்பு நின்றிருந்தார்கள். அப்போது சிலர் விஜய் ரசிகர்களை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் விஜய் ரசிகர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இருந்தார்கள். உடனே அஜித் ரசிகர்கள் சிலர் TVK ஒழிக ஒழிக, கடவுளே அஜித்தே என்று கோஷமிட்டு இருக்கிறார்கள். பின் அங்கிருந்த போலீஸ் நுழைந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி இருக்கிறார்கள்.
படத்தின் கதை:
மேலும், படத்தில் அர்ஜுன் (அஜித்) , கயல் (திரிஷா) ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருக்கும் கணவர் மனைவியாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கும் போது இருவரும் ஒரு நாள் ஒரு நீண்ட பயணம் சென்றார்கள். அப்போது இவர்களின் கார் பாலைவனத்திற்கு நடுவே நின்று விடுகிறது. அப்போது ட்ரக்கில் ரக்ஷித் (அர்ஜுன்)வருகிறார். அவர் இருவருக்கும் உதவி செய்ய முன் வருகிறார். இதனால் திரிஷாவை அவரது வாகனத்தில் அஜித் ஏற்றி அனுப்பிவிடுகிறார். தனது மனைவியை அழைத்து சென்ற பின்னர் அவர் அவரின் ட்ராக்கில் திரிஷாவை ரக்ஷித் (அர்ஜுன்) மீண்டும் வந்து தன்னையும் அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் திரும்பி வராததால் தனது மனைவியை தேடி செல்கிறார் அர்ஜுன் (அஜித்). அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.