அரசியலின் நடிகன் சீமானே - விஜய் குறித்து பேசியதால் ஊரெங்கும் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்.

By Rajkumar · 24/12/2020

விஜய் உட்பட்ட நடிகர்கள் யாரும் இனி அரசியலுக்கு வரக் கூடாது என்று சீமான் கூறிய கருத்தை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். தமிழக அரசியலை பொறுத்த வரை பல்வேறு நடிகர் நடிகைகள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளனர். அதில் எம் ஜி ஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பல சினிமா பிரபலங்கள் தமிழகத்தை ஆண்டும் உள்ளார்கள். இவர்களை தொடர்ந்து விஜயகாந்த், சரத்குமார், சீமான், குஷ்பூ, ரோஜா என்று பல்வேறு நடிகர் நடிகைகள் அரசியலில் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கின்றனர். அதிலும் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வரும் ரஜினி, கமல் கூட அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் களம்காண இருக்கின்றனர்.

https://twitter.com/S_ManikandanDC/status/1341662292455219206

அதே போல நடிகர் விஜய் கூட விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆணித்தனமாக நம்பிக்கை வைத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இப்படி ஒரு நிலையில் ரஜினி, கமல், விஜய் போன்றவர்களின் அரசியல் வருகை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சீமான், எங்களை வழி நடத்துவதற்கு எங்களுக்குள் ஒருவர் இல்லையா? இதற்கு மகாராஷ்டிராவில் இருந்து ஒருவர் வரவேண்டுமா? மானம், வீரம், அறம் ஆகிய மூன்றும் உயிர் என்று வாழ்ந்த தமிழினத்துக்கு இது ஒரு தன்மான இழப்பு. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை விட்டுவிட்டு ரஜினிகாந்தை மட்டும் பிடிக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.

அவர்களையெல்லாம் விட்டு விட்டதால்தான் இப்போது இவர்களை பிடிக்க வேண்டியதாக இருக்கிறது.பிரபாகரனை பற்றி, ரஜினியும், கமல்ஹாசனும் மதிப்பீடு சொல்லிவிடுங்கள் பார்ப்போம். என்னுடைய தாய்மொழி தமிழ், உங்களுடைய தாய் மொழி என்ன என்று முதலில் சொல்லுங்கள். அவ்வளவு மானங்கெட்ட கூட்டமா நாங்கள்?ரஜினிகாந்த், கமல்ஹாசனை அடிக்கிற அடியில் வேறு எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றாது என்றார். இது விஜய்க்கும் பொருந்துமா என்ற நிருபரின் கேள்விக்கு, எல்லோருக்கும் பொருந்தும். நானும் திரையுலகத்தில் இருந்து வந்துள்ளேன். ஆனால் நான் ரசிகர்களை சந்தித்து அரசியலுக்கு வரவில்லை. சாவுகூட்டத்தில் வெடித்துக் கிளம்பி மக்களை சந்தித்து நான் அரசியலுக்கு வந்துள்ளேன் என்று கூறி இருந்தார் சீமான்.

சீமானின் இந்த பேச்சக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தேனி மாவட்ட இளைஞர் அணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தேனி என்ஆர்டி நகர் பகுதியில் சீமானை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ‘அரசியலின் நடிகன் சீமானே எங்கள் தளபதி பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டே சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைகூறிய காட்சிகளையும் அதிமுக கட்சியினர் எதிர்த்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். பின்னர் எப்படியோ அந்த பிரச்சனை ஓய்ந்தது. இதையடுத்து நடிகர் விஜய் எடப்பாடி பழனி சாமிக்கு நன்றி தெரிவித்தார். இதனை கிண்டல் செய்யும் வகையில் சீமான் விஜயை கடுமையாக தாக்கி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full