சங்கீதாவை விஜய் விவாகரத்து செய்து விட்டு இரண்டாம் திருமணம் செய்யப் போகிறார் என்று எழுந்த சர்ச்சைக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய்-சங்கீதா. இவர்களுக்கு திருமணம் ஆகி 22 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள்.

சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. விஜயின் தீவிர ரசிகையான சங்கீதா விஜயை சந்திப்பதற்காக சென்னைக்கு வந்து விஜய்யின் பெற்றோர்களையும் சந்தித்து இருக்கிறார். சங்கீதாவை விஜய் பெற்றோர்களுக்கு பிடித்துப் போக சங்கீதாவிடம் விஜயை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டிருக்கிறார்கள். இதற்கு சங்கீதாவும் சம்மதித்து இருக்கிறார். ஆனால், ஆரம்பத்தில் இந்த திருமணத்திற்கு யோசித்து இருக்கும் விஜய் பின்னர் பெற்றோர்களின் ஆசைக்காக சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

விஜய்-சங்கீதா விவாகரத்து:

இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 22 ஆண்டுகளாக சங்கீதாவுடன் வாழ்ந்து வந்த விஜய் தற்போது மனைவியை பிரிந்துவிட்டதாக செய்திகள் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டு அவர் இரண்டாம் திருமணம் செய்துப்போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து விஜய் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

விழாவில் விஜய் சொன்னது:

இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது, நேற்று மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கிய விழாவில் விஜய் அவர்கள் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அப்போது விஜய், இந்த சமூக வலைத்தளத்தில் வரும் செய்திகள் எல்லாம் 75% பொய்யானவை. நான் எல்லோரையும் சொல்லவில்லை. ஒரு சில பேர் கவர்ச்சிகரமான தகவலை வெளியிடுவதாக நினைத்து சில போலியான தகவலையும் வெளியிடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்:

இதன் மூலம் சில மாதங்களாக விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்வது, பெற்றோர்களை மதிக்காமல் விஜய் இருக்கிறார் என்று பரவிய பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் விஜய் முற்றுப்புள்ளி வைத்தது தான் சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் வாரிசு.

Advertisement

விஜய் நடிக்கும் படங்கள்:

வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை அடுத்து விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

Advertisement