தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். தெறி, மெர்சல் போன்ற படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லி அவர்கள் தளபதி விஜய் வைத்து உருவாகிய பிகில் படம். தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகி பட்டைய கிளப்பியது. விஜய் ரசிகர்கள் உலகம் முழுவதும் பிகில் படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடினார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. அது மட்டும் இல்லாமல் விஜயும், அட்லீயும் இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தார்கள்.

Advertisement

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். இவர்களோடு படத்தில் விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகி பாபு என பல நடிகர்கள் நடித்து உள்ளனர். மேலும், ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிகில் படத்தை தயாரித்து உள்ளார்கள். ஏ.ஆர். ரகுமான் அவர்களின் ஒவ்வொரு பாடலும் வெறித்தனம். இந்த பிகில் படம் முழுக்க முழுக்க பெண்களின் ‘கால் பந்தாட்டத்தை’ மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். அதோடு கடந்த ஆண்டு வெளிநாடுகளில் வெளியான தமிழ் படங்களிலேயே இந்த படம் தான் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் செய்திருந்தது.

இதையும் பாருங்க : 48 வயதில் 24 வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் தபு. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

தளபதி விஜயின் பிகில் படம் வெளியாகி உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 140 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்று கூறப்படுகிறது. இந்த அளவிற்கு இந்த படம் பிரபலமானதால் பாலிவுட் கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனம் விஜய்யை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார்கள் என்ற தகவலும் வெளிவந்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்திற்கு விஜய்க்கு நூறு கோடி ரூபாய் சம்பளம், 18 கோடி ரூபாய் ஜிஎஸ்டி முழு முன்பணமாக செலுத்த உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

Advertisement

Advertisement

இந்த படம் ஒப்பந்தம் இறுதி ஆனால் ஷாருக்கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் 30% முன்கூட்டியே பணம் வசூலிப்பதும், லாபத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வதும் சில நேரங்களில் எதிர்ப்பதை விட குறைவாகவும், அதிகமாகவும் இருக்கலாம். இது மட்டும் உறுதியானால் இந்திய நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருப்பார் என்று சினிமா ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த அறிக்கை தளபதி 65 படத்திற்காகவா அல்லது அதற்குப் பிறகா என்பது இன்னும் தெரியவில்லை.

மாநகரம், கைதி படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

Advertisement