விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடங்கியிருக்கும் புதிய செயலி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர டிரன்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் வாரிசு என்ற படத்தில் மும்முரமாக நடித்து கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கமிருக்க, விஜய் அவர்களின் விஜய் மக்கள் இயக்கம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த இயக்கம் சார்பில் பல சமூக பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக நடைபெற்ற தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பல உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தார்கள். தேர்தலுக்கு பின் விஜய் மக்கள் இயக்கம் பல சேவைகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது.

Advertisement

இதையும் பாருங்க : பள்ளிக்கு சென்ற சிறுமியிடம் காரில் இருந்தபடி இப்படி ஒரு கேவலத்தை செய்த கும்கி பட நடிகர் – போக்சோ சட்டத்தில் கைதி..

விஜய் மக்கள் இயக்கத்தின் அறிக்கை:

தமிழக மக்களுக்கான இரத்த தேவைக்கு உதவும் வகையில் தளபதி விஜய் குருதி இயக்கம் எனும் ரத்ததான செயலியை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். மேலும், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், சமூக வலைதளப் பக்கங்கள், யூடியூப் சேனல் மற்றும் இணையதளம் ஆகியவற்றில் இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது.

Advertisement

அறிக்கையில் கூறியிருப்பது:

வணக்கம்..

Advertisement

தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க மக்கள் சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் தளபதியின் உயிருக்கு உயிரான ரசிகர்கள். அப்படிப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் சக்தியை, மக்களுக்கு பயனுள்ள வகையில் வழிநடத்தும் விதமாக மற்றும் ஒரு முயற்சியாக இரத்ததானம் செய்ய “தளபதி விஜய் குருதியகம்” என்ற செயலியை (Mobile Application) உருவாக்கி இருக்கின்றோம். இதன் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்களை தன்னார்வலர்களாக இணைத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் இரத்ததான சேவையை மக்களுக்காக வழங்க உள்ளோம்.

தளபதி விஜய் குருதியகம் செயலி:

மேலும், இந்த செயலில் இரத்ததானம் கொடுக்க முன் வருபவர்கள் (Volunteers) இணைந்து கொள்ளவும், இரத்தம் தேவைப்படும் பயனாளர்கள் பயன்பெறவும் உறுதுணையாக செயல்படும். “தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம்” விலைமதிப்பற்ற பல உயிர்களை காக்கும் பொறுப்பை தனது ரசிகர்களான தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வழங்கி வழிநடத்த இந்த செயலி துணை நிற்கும் என்பதையும், தளபதியின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். இத்தோடு இதே நன்னாளில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூ ட்யூப், இணையதளம் (Facebook, Instagram, Twitter, Youtube Channel & Website) பக்கங்களையும் திறந்துள்ளோம்.

குவியும் பாராட்டுக்கள்:

தளபதி மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ளலாம். மற்றபடி, இன்றைய சிறப்பு வாய்ந்த இவ்விழாவில் அனைத்து தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் பங்கேற்று விழாவை சிறப்பித்துள்ளனர். இந்த செய்தியை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்து உதவ வேண்டும் என அன்புடன் புஸ்ஸி N.ஆனந்து என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், தளபதி விஜய் அவர்களின் நல்லாசியுடன் இன்று அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தளபதி குருதி இயக்கம் ரத்ததானம் செயலி வெளியானதைத் தொடர்ந்து பலரும் பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement