தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும். தமிழகத்தில் “தல, தளபதி” என்று சொன்னாலே போதும் வெறித்தனம் தான். அந்த அளவிற்கு தமிழகத்தில் ‘தல, தளபதிக்கு’ ரசிகர்கள் அதிகம்.

அதுமட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கு சென்றாலும் ‘தல, தளபதி’ ரசிகர்களை பார்த்து விடலாம். ஏன்னா, பட்டி தொட்டி எங்கும் ‘தல, தளபதி’ ரசிகர்கள் தான் உள்ளனர். உண்மையிலேயே அஜித்தும் விஜயும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.

Advertisement

எப்போதுமே விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் இடையே சண்டை, சச்சரவு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சாந்தனு அவர்கள் சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் குறித்து காணப்படும் நெகட்டிவ் கருத்துகள் பற்றி தெரிவித்துள்ளார். பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்துவது அஜித், விஜய் ரசிகர்கள் கருத்து தான்.

எப்போதும் ஒருவருக்கொருவர் மாறி மாறி ஏதாவது ஒரு விஷயத்தை செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒயின் அதை கலவர பூமியாகவே மாற்றி விடுகிறார்கள். ஆரம்ப காலத்தில் அஜித்தை தாக்கி விஜய் படத்தில் வசனம் இடம் பெறுவதும் அதேபோல விஜய்யை தாக்கி அஜித் படத்தில் வசனங்கள் இடம் பெறுவதும் நாம் அனைவருமே கொண்டிருக்கிறோம். ஆனால், அஜித்தை தாக்கி வசனம் பேச சன்ன இயக்குனரிடம் அதை மறுத்திருக்கிறார் விஜய்.

Advertisement

அது விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த வசீகரா படத்தில் தான். இந்த படத்தை இயக்குனர் செல்வபாரதி இயக்கி இருந்தார். இவர் விஜய்யை வைத்து பிரியமானவளே படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற செல்வ பாரதி கூறுகையில்ன், வசீகரா படத்தில் விஜய்க்கு அஜித்துக்கு எதிரான வசனம் ஒன்றை கூறினேன. அது ‘நீ பெயர் வச்சா தான் வில்லன் நான் பேசிக்கவே வில்லன்’ என்ற வசனம் தான் அது. ஆனால் அந்த வசனத்தை கேட்ட விஜய் இந்த வசனத்தை பேச மாட்டேன் என்று கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement