கதையை கூட கேட்காமல் திருப்பி அனுப்பிய விஜய் ! அட்லீ எடுத்த அதிரடி முடிவு

By Ashok · 4/4/2018
இயக்குனர் அட்லி விஜயயை வைத்து தெறி, மெர்சல்,என்று இரண்டு மாபெரும் வெற்றிப்படங்களை இயக்கியவர். மேலும் மெர்சல் படம் 250 கோடி வசூல் சாதனையை படைத்துடன் விஜய்க்கு ஒரு மாபெரும் புகழை தேடித்தந்தது. இந்நிலையில் சில மெர்சல் படத்திற்கு பிறகு அட்லீயின் அடுத்த படைப்பு எது?அதில் யார் நடிக்கப்போகிறார் என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.சில மாதங்களுக்கு முன்னர் கூட  அட்லீ  ஒரு பேட்டியில் என்னுடைய அடுத்த படத்தின் ஹீரோ விஜய் தான் என்று அறிவித்திருந்தார் இதனால் விஜய் ரசிகர்கள் மீண்டும் ஒரு மெர்சல் கூட்டணி உருவாக போகிறது என்று மகிழ்ச்சியில் திகைத்தனர். இந்நிலையில் ஒரு புதிய கதையுடன் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் விஜய் கதையை கூட கேட்காமல், பின்னர் பார்க்கலாம் என கூறி திருப்பி அனுப்பி வைத்துவிட்டாராம்.இதனால் அட்லீ மிகவும் கோவமடைந்து அந்த கதயைய் தூக்கி கொண்டு தெலுங்கு சினிமாவிற்கு கிளம்பிவிட்டாராம். தற்போது அந்த கதையில் நடிக்க தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான அல்லு அர்ஜுன், பிரபாஸ், பவன் கல்யாண் உள்ளிட்டவர்களிடம் கதை கூறி வருகிறாராம்.ஆனால் இந்த படத்தில் பவன் கல்யாண் தான் நடிக்க போகிறார் என்று ஒரு சில டொலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tamil Behind Talkies AMP · Quick view
View full