இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்திற்கு தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் காத்துக்கிடக்கின்றனர். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாவதற்கு முன்பாகவே இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. மேலும், கடந்த ஜூன் 21 ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான பின்னர் “சர்கார் ” படத்தின் பீவர் ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் விதமாக தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில் நடிகர் விஜய் கைகளை காட்டியபடி நின்று கொண்டிருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

தற்போது படு மும்மரமாக நடந்து வரும் “சர்கார் ” படத்தின் படைப்பிடிப்புகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை எப்படியாவது வரும் தீபாவளிக்குள் வெளியிட வேண்டும் என்று இந்த படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உறுதியாக இருந்து வருகிறாராம்.

Advertisement
Advertisement