சிவகார்த்திகேயன்,மா கா பா ஆனந்த் தை தொடர்ந்து ரக்ஷனுக்கும் உதவிய பிரபல நடிகர்.

By Ashok · 1/3/2018
நடிகர் விஜய் சேதுபதி ஒரு சிறந்த நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை எப்போதும் மக்களுக்காக செலவிடுகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட அனில் சேமியா விளம்பரத்தில் நடித்து அதன்மூலம் கிடைத்த 50 லட்சத்தை மாணவி அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்டத்திற்கு கொடுத்துள்ளார். அதேபோல் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கும் எப்போதும் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் டிவியின் தொகுப்பாளர் ரக்சன், விஜய் சேதுபதியை ஒருநாள் பார்க்க வேண்டும். எப்படியாவது அவரது படத்தில் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை அறிந்த விஜய் சேதுபதி, ஒரு நாள் திடீரென ரக்சனுக்கு போன் செய்து அழைத்துள்ளார். கவண் படத்தின் சூட்டிங் இடத்தில், ரக்சனை அழைத்து வைத்து, ஒரு படம் என்றால் எப்படி தயாராகிறது, என்ன ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொடுத்தாரம். இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார் ரக்சன்.    
Tamil Behind Talkies AMP · Quick view
View full