விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் பிரியா மஞ்சுநாதான். விஜய் டிவி யில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். ஜோடி நம்பர் மற்றும் கவின் நடித்த சரவணன் மீனாட்சி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர்.விஜய் மற்றும் கலைஞசர் தொலைகாட்சியில் பங்குபெற்ற பிரியா பல்வேறு தொலைகாட்சி பிரபலங்களின் நட்பை உடையவர். ஆனால், இவர் திடிரென்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்தது சின்னத்திரை நட்சத்திரங்களுக்கிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தீடீறென்று சுந்தர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தனது கணவர் குறித்து அவர் கூறுகையில் ‘தனது கணவர் சுந்தர் தமிழ் நாட்டை சேர்த்தவரென்ரும் ,கொஞ்ச நாள் லண்டனில் வேலை பார்த்துவிட்டு தற்போது சென்னையில் பிரபல கார் கம்பெனியில் வேலை பார்த்தவேறென்றும்கூறியிருந்தார்.

Advertisement

மேலும், திருமணத்திற்கு முன் சில நாடகங்களில் நடித்து வந்த பிரியா திருமணத்திற்கு பிறகும் நடிக்கவிரும்பினார். ஆனால், கடந்த சில காலமாக இவரை சின்னத்திரை பக்கம் காண முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் பிரியா கர்ப்பமாகஇருந்து வசந்தார். அந்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரியாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியை பிரியா, மகிழிச்சியோடு தெரிவித்து இருந்தார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழ்நதை இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement