விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்னும் காமெடி நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நவீன் , ஏற்கனவே இரண்டாம் திருமணம் செய்விருந்ததால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சர்ச்சைக்கு உள்ளான நவீன், தற்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஏற்கனவே திருமணமான நவீன், கடந்த சில காலமாக மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவருடன் நெருக்கத்தில் இருந்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த ஜூன் 10 ஆம் தேதி திருமணம் செய்து கொளவிருந்த நிலையில், இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டு நவீன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நவீன் ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நவீன் வேறொரு திருமணம் செய்த்துள்ள இருந்த தகவளை அறிந்த திவ்யா,காவல் நிலையத்தில், தனக்கும் நவினுக்கும் திருமணமான ஆவணங்களை காட்டி புகார் ஒன்றை அளித்துள்ளார் . இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் நவீனின் முதல் மனைவி திவ்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ” 2007 ஆம் ஆண்டில் இருந்தே தனக்கு நவீனை நன்றாக தெரியும். சிறு வயதில் நவீனின் தங்கையிடம் டியூசன் செல்வதற்காக நவீன் வீட்டிற்கு அடிக்கடி சென்றபோது எங்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் வீட்டில் நாங்கள் தனியாக இருந்த போது நவீன் எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார். அவர் என்னுடன் கடைசி வரை இருப்பார் என்று தான் நம்பினேன். ஆனால், அவர் என்னை ஏமாற்றி விட்டார்” என்று நவீனின் மனைவி திவ்யா தெரிவித்துள்ளார்.

Advertisement