தொகுப்பாளினி பிரியங்காவின் விவாகரத்து குறித்து மனம் திறந்து அவருடைய அம்மா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது.

அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். பின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். : பின் இவர் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு இருந்தார்.

Advertisement

தொகுப்பாளர் பிரியங்கா

இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி வந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் பல முறை எவிக்சனில் பிரியங்கா வந்து இருந்தாலும் மக்கள் அவரை காப்பாற்றினார்கள். பின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா வழக்கம் போல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

பிரியங்கா திருமணம்:

இப்படி இவர் கேரியரில் வெற்றி அடைந்தாலும் குடும்ப வாழ்க்கையில் தோற்றார் என்றே சொல்லலாம். பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் கடந்த சில ஆண்டுகளாக பிரியங்கா எந்த ஒரு பதிவிலும், புகைப்படத்தில் தான் கணவரை பற்றி பதிவிடவில்லை. இதனால் பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். பின் பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா தன் கணவர் பற்றி பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் பேசவே இல்லை.

Advertisement

பிரியங்கா திருமணவாழ்க்கை நிலை:

ப்ரீஸ் டாஸ்கில் கூட அவரது கணவர் வரவில்லை. இதனால் பிரியங்கா தன் கணவரை விட்டு பிரிந்துவிட்டதாக பலரும்கூறி இருந்தார்கள். மேலும், இது குறித்து வெளிப்படையாகவே ரசிகர்கள் கேட்டு இருந்தார்கள். ஒருவழியாக பிரியங்கா தன் கணவரை பிரிந்து விட்டதாக ஓத்து கொண்டார். ஆனால், பிரிவிற்கான காரணம் குறித்து எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் 15 வருடங்களாக பிரியங்கா தொகுப்பாளனியாக இருப்பதை அடுத்து அவருக்கு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் பிரியங்கா மற்றும் அவருடைய அம்மா கலந்து கொண்டிருந்தார்கள்.

Advertisement

பிரியங்கா அம்மா பேட்டி:

அப்போது அவருடைய அம்மா பிரியங்காவின் திருமண வாழ்க்கை குறித்து பேசி இருந்தது, பிரியங்கா ஏற்கனவே தன்னுடைய வாழ்க்கையில் செய்த தவறை போல் இனி செய்யக்கூடாது. அவர் சரியான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அந்த வாழ்க்கையில் அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் ஏற்கனவே செய்த ஒரு தவறால் நான் ரொம்ப அவரை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறேன். இனி அது நடக்காது என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார். இதற்கு பிரியங்காவும் அழுது கொண்டே தலையாட்டி இருந்தார்.

Advertisement