விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சீரியல் ‘தெய்வம் தந்த வீடு’ தொடரும் ஒன்று.2013 ஆம் ஆண்டு துவங்கிய 2017 வரை ஒளிபரப்பானது. ரசிகர்களின் ஆதரவால் இந்த தொடர் 992 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த சீரியலில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சின்ன திரைக்கு அறிமுகமானவர் நடிகை மேக்னா வின்சென்ட்.

மலையாள மொழி மூலம் தான் இவர் சின்னத்திரை சீரியலுக்கு அறிமுகமானார். பின் இவர் மலையாளத்தில் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். அதன் பின் சூர்யா டிவியில் மோகக்கடல், சக்ரவாகம், ஏசியாநெட்டில் ஆட்டோகிராஃப், மழவில் மனோரமா சேனலில் பரினாயம், இந்திரா என எல்லா சேனல்களிலும் ஒரு கலக்கு கலக்கினார். அதற்கு பிறகு தான் நடிகை மேக்னா அவர்கள் தமிழில் தெய்வம் தந்த வீடு என்ற தொடரின் மூலம் மக்களிடையே பெரிய அளவு பிரபலமானார்.

Advertisement

அதிலும் பல பெண்கள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் என்று சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் நடிகை மேக்னா வின்சென்ட் தான். கதை முழுக்க முழுக்க அவரை வைத்து தான் நிகழ்ந்தது.. மேலும், மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் கயல் படத்திலும் நடித்துள்ளார். ‘தெய்வம் தந்த வீடு’ சீரியலுக்கு பின்னர் தமிழில் பொன்மகள் வந்தால், அவளும் நானும் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

அவளும் நானும் சீரியலுக்கு பின்னர் இவரை வேறு எந்த தமிழ் சீரியலிலும் காணமுடியவில்லை. மேலும், மலையாளத்திலும் இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை நடிகை மேக்னா கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் டான் டோனி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இந்த நிலையில் நடிகை மேக்னா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை மேக்னா, திருமணமான ஓராண்டிலேயே கணவரை பிரிந்து தனியாக தான் வசித்து வந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்றுள்ளார்கள். மேக்னாவின் கணவருக்கு விரைவில் இரண்டாம் திருமணம் என்று கூறப்படுகிறது. மேலும், விரைவில் மேக்னா தமிழ் சீரியலில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement