விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி போன்ற தொடர்கள் பார்ட் 1,2,3 என்று ஒளிபரப்பப்பட்டது. அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகம் கூட துவங்கப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்சனை காரணமாக இடையில் பல்வேறு சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சில பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது. அதே போல ஒரு சில சீரியல்களை திடீரென்று நிறுத்தியது சில சேனல். சமீபத்தில் மௌன ராகம் சீரியல் நிறைவடைய போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்க இருக்கிறது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆயுத எழுத்து’ சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கிய இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த சீரியல் துவங்கிய சில மாதங்களிலேயே பல பிரச்சனைகள்.

ஆரம்பத்தில் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் அஸ்மத் கான் மற்றும் ஸ்ரீத்து கிருஷ்ணன் நடித்து வந்தனர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் நீக்கப்பட்டு நெஞ்சம் மறப்பதில்லை சரண்யாவும், ஆனந் என்பவரும் கமிட் ஆனார்கள் நன்றாக போய்க்கொண்டு இருந்த இந்த சீரியல் பிரைம் டைமில் இருந்து நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பானது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலை அதிரடியாக நிறுத்தியுள்ளனர்.

Advertisement
Advertisement