தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான, முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த் இன்று (ஆகஸ்ட் 25) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழ் 69வது கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்தார். ரஜினி மற்றும் கமல் என்ற மாபெரும் நட்சத்திரங்கள் ஆதிக்கம் செய்த காலத்தில் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜயகாந்த்.

ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த விஜயகாந்த் அதன் பின்னர் ரஜினி கமலுக்கு இணையாக ஒரு ஹீரோவாக வலம் வந்தார்.விஜயகாந்த ஆரம்பத்தில் வில்லனாக தான் அறிமுகமானார். இவர் 1979 ஆம் ஆண்டு. ஏ காஜா என்பவர் இயக்கிய படத்தில் தான் அறிமுகமானார். அதன் பின்னர் அதே ஆண்டு செல்வராஜ் இயக்கத்தில் அகல் விளக்கு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். விஜயகாந்த் காலத்தில் தான் கருப்பான நடிகர்கள் பலர் மக்கள் மத்தியில் விரும்பப்பட்டனர்.

Advertisement

அகல் விளக்கு படத்திற்கு பின்னர் விஜயகாந்த் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தார். இந்த நிலையில் விஜயகாந்த் சினிமாவில் வரும் போது எடுத்த முதல் டெஸ்ட் ஷூட்டின் புகைப்படங்கள் சில விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜயகாந்தின் உண்மையான பெயர் விஜயராஜ் தான்.

விஜயராஜ் என்ற இவரின் பெயரில் ராஜ் என்பதை நீக்கிவிட்டு காந்த் என்பதை சேர்த்து இவரை நடிகராக அறிமுகப்படுத்திய காஜா தான். அதன் பின்னர் இவருக்கு கேப்டன் என்ற அந்தஸ்தை கொடுத்தது கேப்டன் பிரபாகரன் திரைப்படம் தான். 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை படத்தை ஆர் கே செல்வமணி இயக்கி இருந்தார் என்பது குறிப்பித்தக்கது.

Advertisement

அனுபவங்களை பகிர்ந்த ராசி ஸ்டியோ உரிமையாளர்:

தனது நண்பர்களுடன் வழக்கமாக அரட்டை அடிக்கும் இடத்திற்கு பக்கத்தில் தான் இந்த ஸ்டுடியோ உள்ளது என்பது விஜயகாந்த்க்கு மகிழ்ச்சி ஆனது. அவரை 12 மணிக்கு மேல் வரவைத்து கடைகளை மூடி வைத்து போட்டோ ஷூட் நடித்தோம் என்று கடையின் உரிமையாளர் கூறினார். அவருக்கு அந்த அளவுக்கு ஆக்சன்களை பண்ண தெரியாது ஆனால் அவர் எம்ஜிஆர் ரசிகர். இங்கு எடுத்த புகைப்படங்களை வைத்துத்தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. 32 புகைப்படங்களை எடுப்பதற்கு 41 நாட்கள் ஆனது. எதற்காக இவ்வளவு நாட்கள் என்றால் அவருக்கு ஆக்ஷன் காட்சிகளை பயிற்சி தர வேண்டும். அவரது சென்னையில் ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து அவர்களது ஆறு நண்பர்களும் தங்கி இருந்தனர் ஒரே அறையில். எடுத்த புகைப்படங்களை ரயில் மூலம் அனுப்பி வைத்துவிட்டு அவருக்கு தகவல் தெரிவித்துவிட்டு.

Advertisement

150 திரைப்படங்களுக்கு மேல் நடித்த ஒரு அரசியல் கட்சி தலைவர் அவர்களின் திரைப்படங்கள் அந்த வளர்ச்சிக்கு காரணம் இந்த ராசி ஸ்டுடியோவில் இருந்து தான் என்றும் பலர் கூறி வருகின்றனர். விஜயகாந்தின் திரைப்படங்கள் வெளியாகும் போது நானும் என்னுடைய நண்பர்களும் அவ்வளவு கொண்டாடி வந்தோம் என்று தெரிவித்தார் ராசி ஸ்டியோ உரிமையாளர் கூறினார். அதன்பின் சினிமாவில் பிரபலமான பின் மன்றங்களை ஆரம்பித்து மதுரை பக்கம் வர முடியாத அளவிற்கு பிஸியாக இருந்து வந்தார் இருப்பினும் ராசிசினுடைய ஆசைத்தம்பி அனுப்பி வைத்தார் என்று கூறினால் வருபவர்களுக்கு ஏன் என்னவென்று கேட்காமல் உதவிகளை செய்வார். தற்பொழுது எப்படி இருக்கின்றோமே மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்பதால் ஆசை தம்பி ஆசை.

Advertisement