விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் இடம்பெற்றுள்ளார் என்ற செய்தி தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படம் தான் ‘மழை பிடிக்காத மனிதன்’. விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி பாடல்கள் மட்டுமே இசையமைக்க, அச்சு ராஜா மணி பின்னணி இசை அமைத்துள்ளார்.

Advertisement

மழை பிடிக்காத மனிதன்:

மேலும், இப்படத்தை கமல் போஹ்ரா , லலிதா, பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான ‘தீரா மழை’ மற்றும் இரண்டாவது பாடலான ‘ தேடியே போறேன்’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. மேலும் இப்படத்திற்கு சென்சார் போர்ட் U/A சான்றிதழை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில்தான் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

படத்தின் டிரைலர்:

இப்படத்தின் ட்ரைலரை விஜய் ஆண்டனி தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ட்ரைலரின் ஆரம்பத்திலேயே இளையராஜாவின் ‘உறவுகள் தொடர்கதை’ பாடலுடன் தொடங்குகிறது. அதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது என்று கூறலாம். மேலும், இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர், விஜயகாந்த் இப்படத்தில் இடம்பெற்றுள்ளார் என்று கூறிய செய்தி மக்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இயக்குனர் பேசியது:

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் விஜய் மில்டன், ‘மழை பிடிக்காத மனிதன்’ அப்படின்னு சொன்ன உடனே உங்களுக்கு ஒரு கேள்வி வருகிறது இல்லையா. அதுதான் படத்தின் கதை. இந்தப் படம் முழுவதும் அந்த ஒரு கேள்விதான் கதையை நகர்த்திக் கொண்டு போகும். கிளைமேக்ஸ் இல் அதற்கான விடை நமக்கு கிடைக்கும். மேலும், ‘ கேப்டன் இந்த படத்தில் இருக்காரு இப்போதைக்கு அது மட்டும் தான் நான் சொல்ல முடியும். அவரு பிளசிங்கா இருக்காரா, இல்ல என்னவா இருக்காரு அப்படி என்ற விஷயம் எல்லாம் இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனால், கேப்டன் இந்த படத்தில் இருக்கார்’ என்று கூறியுள்ளார்.

விஜய் மில்டன் குறித்து:

விஜய் மில்டன் ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் ஆவார். கடந்த 2006 இல் வெளியான ‘அழகா இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ என்ற படம் தான் இவர் இயக்கிய முதல் படம். அதற்குப்பின் கோலி சோடா, விழித்திரு, 10 என்றதுக்குள்ள, கடுகு, கோலிசோடா 2 போன்ற படங்களை இயக்கி உள்ளார். தற்போது இவர் இயக்கியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement