கேப்டன் விஜயகாந்த் இறப்புக்கு பின் அவரது மகன் போட்டுள்ள முதல் பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜயகாந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது. இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைஅளிக்கப்பட்டது.

பல நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவித்தனர். வீடு திரும்பிய சில நாட்களிலேயே அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும், கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

Advertisement

விஜயகாந்த் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்ட நிலையில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள அவரின் கட்சி அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட போது வழி முழுக்க லட்சக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் குவிந்து கேப்டனுக்காக கண்ணீர் சிந்தினர். இதனை கண்ட கேப்டன் மகன்கள் இருவரும் கண்ணீர் மல்க ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் விஜயகாந்தின் இரண்டாவது மகனும் நடிகருமான சண்முகப்பாண்டியன் இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

Advertisement

உங்களின் இதயபூர்வமான இரங்கலுக்கு எங்களின் நன்றிகள்! ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்த நேரில் வந்திருந்தனர். சாலைகளிலும் பாலங்களிலும் காத்திருந்தனர்.மக்களின் இந்த ஆதரவு அனைத்துமே எங்களின் தந்தை எப்படியானதொரு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதையும், எத்தகையதொரு அன்பைச் சம்பாதித்திருக்கிறார் என்பதையும் எடுத்துரைக்கின்றன.

Advertisement

இந்த இழப்பிலிருந்து நாங்கள் மீண்டு வரும் இந்தக் கடுமையான நேரத்தில் உங்களின் இந்த ஆதரவு, எங்கள் குடும்பத்துக்கு ஆறுதலை அளிக்கிறது’ என்று உருக்கமுடன் பதிவிட்டு இருக்கிறார். சண்முகபாண்டியன் இதுவரை சகாப்தம், மதுரை வீரன் போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து படைத்தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கும்கி படம் போல யானை சம்மந்தப்பட்ட படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement