கேப்டன் விஜயகாந்திற்கு மூன்றாம் நாளாக சிகிச்சை தொடர்ந்து வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது படத்தில் பிச்சை காரனாக நடித்த ஒரே நடிகரும், வேறு மொழிகளில் வாய்ப்பு கிடைத்த போதிலும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார்.

Advertisement

இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இவர் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். மேலும், இவர் நடிகர் என்பதையும் தாண்டி நல்ல உள்ளம் கொண்டவர் என்றே சொல்லலாம். இவரை தேடி யார் வந்தாலும் சாப்பாடு போட்டு அன்போடு அனுசரிப்பார். தன்னால் முடிந்த உதவிகளையும் அவர்களுக்கு செய்வார்.

இவர் செய்த பல உதவிகள் வெளியே தெரியாமலே போயிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கமே கடனில் மூழ்கியிருந்தபோது கலை நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்து பல உதவிகளை செய்திருக்கிறார். இவருக்கு உடல் நல குறைவின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கட்சியை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர்.

Advertisement

மேலும், கட்சியின் வளர்ச்சிக்கு நேரடியாக மக்களை சந்தித்து செயல்படவில்லை என்றாலும் விஜயகாந்த் அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். தற்போது தொடர் சிகிச்சை எல்லோரும் விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று வருகிறார் அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தேமுதிக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

Advertisement

அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியா மருத்துவமனையில் விஜயகாந்த்திற்கு மூன்றாவது நாளாக சிகிச்சை தொடர்ந்து வருகிறது. விஜயகாந்த் சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், உடல் நலம் பரிசோதனைக்கு பிறகு ஒரு சில தினங்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது

Advertisement