தன்னுடைய அம்மா குறித்து உருக்கமாக நடிகை விஜயலக்ஷ்மி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் விஜயலட்சுமி. இவர் திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். இவர் 2007 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘சென்னை 600028’ என்ற படத்தின் மூலம் நடிகையாக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், சரோஜா, கற்றது களவு போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கி உடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். பின் வெற்றிகரமாக முடிவடைந்த சர்வைவர் நிகழ்ச்சியிலும் விஜயலட்சுமி பங்கேற்றிருந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி முதல் முதலாக ஒளிபரப்பட்ட நிகழ்ச்சி.
சர்வைவர் நிகழ்ச்சி:
இது ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், கடுமையான பல போட்டிகள், சவால்கள் என்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது. உயிர் வாழ்வதற்கான போராட்டம் என்ற அடிப்படையில் இந்த கேம்மை டெலிகாஸ்ட் செய்து இருந்தார்கள். அனைவரும் எதிர்பார்த்த 90 நாட்கள் சர்வைவர் முடிவில் விஜயலட்சுமி டைட்டிலை பெற்றது மிக பெரிய வியப்பாக இருந்தது.
விஜயலக்ஷ்மி குறித்த தகவல்:
இதில் ஆண்களுக்கு நிகராக போட்டியிட்டு ஒரு கோடியை விஜி தட்டிச் சென்றார். இதற்காக இவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அதற்கான வீடியோவும், புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் விஜயலட்சுமிக்கு வாழ்த்து மழை பொழிந்து இருந்தார்கள். இதனுடைய நடிகர் விஜயலட்சுமி அவர்கள் பெரோஸ் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
விஜயலக்ஷ்மி குடும்பம்:
இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருடைய சகோதரிகள் கனி, நிரஞ்சனியும் மீடியாவில் பிரபலமான நபர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கனி அவர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜயலட்சுமி அவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி இருக்கிறார்.
விஜயலக்ஷ்மி பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை விஜயலட்சுமி, நான் இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்தபோது என்னுடைய அம்மா ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார். அப்போது என்னை எல்லோருமே சேர்ந்து அழக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். என்னால் அழ கூட முடியவில்லை. ஒரு குழந்தை வந்த சந்தோசமான நேரத்தில் எங்க அம்மாவுக்கு இப்படி ஆனது இப்ப நினைத்தாலும் கஷ்டமாக இருக்கிறது. நான் என் அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.