திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு பா. ரஞ்சித் செய்து செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகிவரும் நிலையில் அவரை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர். கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பிகே திரைப்பட விழா குறித்த செய்திகள் தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் தங்களுடைய நீலம் பண்பாட்டு மையம் சார்பாக பிகே ரோஸி திரைப்பட விழாவை வருடம் வருடம் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது நான்காம் ஆண்டு பிகே ரோஸி திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த விழா கடந்த எட்டாம் தேதி தொடங்கி நேற்று முன் தினம் தான் நிறைவடைந்து இருக்கிறது. இந்த விழாவில் நடிகர்கள், இயக்குனர்கள் பலர் கலந்து இருந்தார்கள். இதில் தமிழ், மலையாளம், மராத்தி உட்பட பல மொழி திரைப்படங்கள் மற்றும் ஆவண படங்கள் திரையிடப்பட்டது.

Advertisement

பிகே ரோஸி திரைப்பட விழா:

அதோடு பல்வேறு தலித் இயக்குனர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலித் சினிமா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். கேரளா திரைப்படத் துறையில் தலித் இயக்கம் பரவுவதில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் பேசியிருக்கிறார்கள். அந்த வகையில் மலையாள இயக்குனர் பிஜு தாமோதரன் அவர்கள் பல விஷயங்களை பகிர்ந்தார். அப்போது அவர் மேடையில் காலா படத்தில் ரஜினிகாந்த் போன்ற ஒரு ஸ்டார் நடித்ததை பெரிய விஷயம்.

மேடையில் ரஞ்சித் செய்தது:

அது ரஞ்சித்தின் அரசியல் என்று ரஜினிகாந்துக்கு தெரியுமா? என்பது சந்தேகம் தான் என்று சொன்னவுடன் ரஞ்சித் மேடையிலேயே நக்கலாக சிரித்திருக்கிறார். அவர் மட்டும் இல்லாமல் அங்கிருந்த எல்லோருமே சிரித்து இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலருமே, நன்றியை மறக்கக்கூடாது. ரஜினியை வைத்து படம் பண்ணிய நான் தான் நீ இந்த இடத்தில் இருக்கிறாய்.

Advertisement

நெட்டிசன்கள் கண்டனம்:

ரஜினியை வைத்து படம் எடுப்பதற்கு முன்பு இருந்த ரஞ்சித்துக்கும், இப்போது இருக்கும் ரஞ்சித்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்றெல்லாம் மோசமாக இயக்குனர் ரஞ்சித்தை திட்டி வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ ரஜினி ரசிகர்கள் பலரும் ரஞ்சித்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் எக்ஸ் தளத்தில் ‘நன்றி கெட்ட ரஞ்சித்’ என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.

Advertisement

விஜயசாரதி பதிவு :

இப்படி ஒரு நிலையில் ரஞ்சித்தை மறைமுகமாக சாடி இருக்கும் நீங்கள் கேட்ட பாடல் புகழ் விஜயசாரதி ‘ எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. எந்த நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்; ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது. தலைவரை பேசினால் அவர் விட்டு விடுவார்.கர்மா விடாது.’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement