தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும்.ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் ராஜாவின் பார்வையில் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் பின்னர் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் படத்தில் நடிப்பதாக இருந்தது.

ஆனால், அஜித் அந்த படத்தில் இருந்து திடிரென்று விலகிவிட்டார். அதன் பின்னர் இவர்களது படங்களில் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி வசனங்களை பேச ஆரம்பித்தனர்.இப்படி நிலையில் இந்த படத்தை தயாரித்த செளந்தர பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை அளித்துள்ளார். அந்தப் படம் எடுக்கும்போது விஜய், அஜித் இருவருமே சாதாரண நடிகர் தான். ஆனால், இன்று அவர்களிடம் டேட் வாங்குவதே கடினம். ஆனால், 25 ஆண்டுக்கு முன்னரே விஜய் அஜித் வாங்கி அதை படமாக்கிய பெருமை எங்களுக்கு உண்டு.

Advertisement

ராஜாவின் பார்வையிலேயே :

முதலில் இந்த படத்தின் கதையை விஜய்யிடம் சொன்னேன்.அதன் பின்னர் இந்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் என்பதால் என் தம்பிக்கு வழக்கமான அஜித்திடம் இந்த கதையை சொன்னேன். இருவருமே போட்டி போட்டுக் கொண்டு தான் அந்த படத்தில் நடித்தார்கள். இருவரும் அவ்வளவு நட்பா இருப்பாங்க. அவங்க அளவுக்கு யாரும் நட்பா இருக்க முடியாது. படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவுதான் மேலும் விஜய் வெளி தயாரிப்பில் நடித்த முதல் படம் என்பதால் அவருக்கு மிகவும் கம்மியான சம்பளம்தான் கொடுக்கப்பட்டது.

ரசிகர்கள் வரிசையயில் சென்ற தயாரிப்பாளர் :

ஆனால் அஜித் அந்த சம்பளத்தை கூட வாங்கவில்லை என்று கூறி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் விஜய்யின் திருமணத்தின் போது நடந்த சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ள தயாரிப்பாளர் செளந்தர பாண்டியன். அதில் அவர் பேசியது ‘விஜய்ய நான் இன்னிக்கி வர மறக்க மாட்டேன். விஜய் கல்யாணம் பண்ணும் போது என் படம் எல்லாம் ஓடாமல் அடிபட்டு இருந்தேன். அதனால் என்ன மெயின் வாசலில் விடவில்லை. ரசிகர்களுக்கு கயிறு கட்டி அனுப்பி வைக்கப்பட்ட வரிசையில் தான் நான் சென்றேன்.

Advertisement

விஜய் செய்த செயல் :

அப்போது அங்கு இருந்துகொண்டு விஜய்யை தம்பி தம்பி என்று கூப்பிட்டேன். அப்போது அவர் பார்த்துவிட்டு ‘நீங்க ஏன் இந்த பக்கம் வரீங்க’ என்று கேட்டார். பின்னர் கயிறை தூக்கிவிட்டு வரவழைத்தார். பின் அவர் மனைவியிடமும் அவரது அம்மாவிடமும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அங்கு ஒரு பெரிய தயாரிப்பாளர் இருந்தார் அவரை கூட கண்டுகொள்ளாமல். இவர் தான் என் படத்தின் தயாரிப்பாளர் என்று அறிமுகம் செய்து வைத்தார்.

Advertisement

பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம் :

விஜய் – சங்கீதாவுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. விஜய்யின் விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் திருமணம் படு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Advertisement