பேச ஒன்றும் இல்லை..! நீ என்னை பேட்டி எடுக்காதே.! டிடி-யிடம் வெளிப்படையாக கூறிய பிரபல நடிகர்

By Ajju · 26/5/2018
நடிகர் சீயான் விக்ரம் தேசிய விருது பெற்ற ஒரு சிறந்த நடிகர், நடிப்பையும் தாண்டி அணைத்து தரப்பு ரசிகர்களிடமும் மிகவும் சகஜமாக பழக கூடியவர். ஆனால் நடிகர் விக்ரமே தன்னை நிகழ்ச்சி அழைத்த டிடி இடம் இனி தன்னை உன் நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைக்காதே, என்னை நீ பேட்டியெடுக்க தேவை இல்லை என்று கூறியுள்ளார். விஜய் டிவி தொகுப்பாளினிகள் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது டிடி என்ற திவ்யதர்ஷினி தான். விஜய் டிவியின் ஆஸ்தான பெண் தொகுப்பாளினியான இவர், அந்த தொலைகாட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். விஜய் டிவியில் காபி வித் டிடி என்ற நிகழ்கியை தொகுத்து வழங்கி வருகிறார் டிடி. நீண்ட வருடங்களாக இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சினிமா பிரபலங்களை அழைத்து வந்து அவர்களிடம் பல சுவாரசியமான விஷயங்களை கேட்டு கலகலப்பாக பேட்டியெடுப்பார் டிடி. சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்கு டிடி நடிகர் விக்ரமை விருந்தினராக அழைத்துள்ளார் அதற்கு நடிகர் விக்ரம் "உன் நிகழ்ச்சியில் நான் பல முறை பங்குபெற்று விட்டேன், இதற்குமேல் நீ என்னை கேள்வி கேட்க ஒன்றும் இல்லை,நான் பதில் சொல்லவும் ஒன்றும் இல்லை என கூறியுள்ளார். அதனால், இனி நீ என்னை பேட்டி எடுக்கத்தே" என்று டிடி-யிடம் ஜாலியாக கூறியுள்ளார் நடிகர் விக்ரம்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full