ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவை நிறுத்திவைப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மனு பரிசீலனையின்போது சுயேச்சைகளின் மனுக்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டன. 32 சுயேச்சைகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 39 பேரின் மனுக்கள் இதுவரையில் ஏற்கப்பட்டுள்ளன. 72 வது மனுவாகப் பரிசீலிக்கப்பட்ட விஷாலின் மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மனுவை நிறுத்திவைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். முன்னதாக, வங்கிக் கணக்கை விஷால் சரிவர தாக்கல் செய்யவில்லை என்று கூறி தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் விஷாலின் மனுவை நிராகரிக்க வலியுறுத்தினர். இந்நிலையில், விஷால் மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை செய்யும் இடத்தில் காத்திருக்கிறார்.