தலைவனுக்காக தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்வேன் - முன்னணி ஹீரோ அறிவிப்பு

By Tamil Selvam · 4/1/2018
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தேசிய அளவில் பேச்சு பொருளாக மாறியுள்ளது. அவருக்கு ஆதரவாக பல நடிகர்களின் குரல் எழும்பினாலும் சாமான்ய தமிழக மனிதனின் கேள்விகளுக்கு விடை இன்றுவரை அவரால் கொடுக்க முடியவில்லை. அவை இல்லாமலே ஆன்மீக அரசியல் செய்ய களத்தில் இறங்கிவிட்டார் ரஜினிகாந்த். இவருக்கு ஆதரவாக நடிகர் லாரன்ஸ் அரசியலில் குதிக்க உள்ளார். வரும் 7ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார் லாரன்ஸ். அதேபோல் கடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கபட்ட நடிகர் விஷாலும் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என அறிவித்துள்ளார். அரசியல் எனற சமூக சேவையில் என் தலைவன் தீவிரமாகி இறங்கி விட்டார். இதனால் அவருக்கு ஆதரவாக தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இறங்கி பிரச்சாரம் செய்ய உள்ளேன் எனக் கூறியுள்ளார் நடிகர் விஷால். ஆர்.கே நகர் தேர்தலில் சரியாக விண்ணப்போம் பூர்த்தி செய்ய முடியாத விஷாலும் இதுவரை கொள்கைகளை விளக்கம் கொடுக்காமல், தமிழக மக்களின் பிரச்சனைக்கு குரல் கோபியூக்கமல அமைதி காத்து தற்போது காத்திருக்கும் ரஜினியும் ஓரே இடத்தில் இருப்பது தான் ஹைலைட்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full