மீண்டும் தோற்றுப் போய் பாடம் கற்றுக் கொண்டேன் என்று மனவேதனையில் விஷ்ணு விஷால் பதிவிட்டு இருக்கும் ட்வீட் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

அதனை தொடர்ந்து இவர் பலேபாண்டியா, குள்ளநரிக்கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கடந்த ஆண்டு விஷ்ணு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியிருந்த படம் கட்டாகுஸ்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. தற்போது இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார். அது மட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இது மட்டுமில்லாமல் இன்னும் சில படங்களிலும் விஷ்ணு கமிட் ஆகியிருக்கிறார். அதில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மோகன்தாஸ். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகன் ஆரியன் பெயரிலும் ஒரு படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார்.

விஷ்ணு விஷால் குடும்பம்:

இதனை தொடர்ந்து இடம் பொருள் ஏவல் என்ற படத்திலும் விஷ்ணு நடித்திருக்கிறார். இதனிடையே விஷ்ணு விஷால் – ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

Advertisement

விஷ்ணு விஷால் டீவ்ட்:

பின் விஷ்ணு அவர்கள் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாவை திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும், விஷ்ணு விஷால் தன்னுடைய மகன் ஆரியனை கவனித்து கொள்கிறார். அதேபோல் ஜுவாலாவும் ஆரியனை ஏற்றுக்கொண்டார்.மேலும், இவர்கள் மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருந்தது. இந்த நிலையில் விஷ்ணு விஷால் அவர்கள் துரோகம் குறித்து ஒரு டீவ்ட் ஒன்றைப் போட்டு இருக்கிறார். அதில் அவர், பரவாயில்லை நான் மீண்டும் முயற்சி செய்தேன். நான் மீண்டும் தோற்றுப் போனேன்.

Advertisement

பதிவை நீக்கிய விஷ்ணு விஷால் :

மீண்டும் பாடம் கற்றுக் கொண்டேன். போன முறை அது என்னுடைய தோல்வியும் அல்ல. அது என்னுடைய தவறும் அல்ல. அது துரோகம் மற்றும் ஏமாற்றம். வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்கள் என்ற பதிவிட்டு இருந்தார். பின்னர் சில நிமிடங்களிலேயே அந்த பதிவையும் அவர் நீக்கி இருக்கிறார். தற்போது விஷ்ணு விஷாலின் இந்த ட்வீட் சோசியல் மீடியாவில் வைரல் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே ஜுவாலாவுடன் பிரச்சனையா? இருவரும் விவாகரத்து செய்ய போகிறீர்களா? வேறென்ன பிரச்சனை? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அது குறித்து விஷ்ணு விஷால் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.

Advertisement