செய்யும் தொழிலை கேவலபடுத்தியதாக விஜய் டிவி சீரியல் மீது ஆச்சாரிகள் புகார்.!

By Rajkumar · 1/9/2019

தொலைக்காட்சி சேனல்களை பொறுத்தவரை சீரியல்கள்தான் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் ரியாலிட்டி ஷோக்களை விட தொலைகாட்சி தொடர்களுக்கு தான் ரசிகர்களும் அதிகம் இருந்து வருகின்றனர் அந்த வகையில் அரண்மனைக்கிளி தொடரும் ஒன்று.

கடந்த பல மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இல்லத்தரசிகள் மத்தியிலும் இந்த தொடர் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்த தொடரில் ஆச்சாரி களை இழிவு படுத்தியதாக ஒரு புதிய சர்ச்சை ஒன்று இருந்துள்ளது.இதனால் இந்தத் தொடர் மீது விஸ்வகர்மா அமைப்பினர் புகார் ஒன்றை அளித்து உள்ளனர்.

இதுகுறித்து விஸ்வகர்மா அமைப்பு அளித்துள்ள புகாரில், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 29 8 2019 அன்று ஒளிபரப்பான அரண்மனைக்கிளி மெகா தொடர்களில் தாலி செய்துகொண்டு அவரும் ஆசாரியின் காலை உடைச்சி விடுறேன் என்று கூறும் காட்சிகளும் அவர் வந்த பின்பு பேசும் பேச்சும் தமிழகத்தில் வாழ்கின்ற 50 லட்சம் விஸ்வகர்மா பொற்கொல்லர்கள் இதற்கு அகில இந்திய விஸ்வகர்மா பேரவை சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் அரண்மனைக்குக் தொடர்பில் ஆசாரியை சம்பந்தமாக விரிவாக பேசும் அத்தனை வார்த்தைகளையும் நீக்கி இத்தகைய செயல்பாட்டிற்கு வரும் தெரிவிக்க வேண்டும் பொற்கொல்லர்கள் சமுதாயத்தையும் இழிவு படுத்திய இந்த செயல்பாட்டிற்கு தக்க நடவடிக்கை நாங்கள் எடுக்க தவறினால் தமிழகம் தழுவிய அளவில் அறவழியில் போராட களம் காண்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது இதனால் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அரண்மணைகிளி தொடருக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது

behindtalkies AMP · Quick view
View full