பிரபல Vjவும் நடிகையுமான ரம்யா 15 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை வியப்படைய செய்துள்ளார். டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் புகழ்பெற்ற தொகுப்பாளினியாக திகழ்ந்தவர் ரம்யா. இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். இவர் முறைப்படி பரத நாட்டியம் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் ரம்யா நடித்து மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் பிட்னஸ் பிரீக் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவார். கடுமையான உடற்பயிற்சி மூலம் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் இவர் அதிக ஆர்வம் உடையவர்.

Advertisement

ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளர் :

அதனுடைய வெளிப்பாடுதான் தற்போது இவருக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளர் என்ற சான்றிதழ் கிடைத்து இருக்கிறது. மேலும், நடிகை ரம்யா செய்த சாதனை குறித்து சோஷியல் மீடியாவில் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டுகளை குவித்து இருந்தார்கள். நியூயார்க்கில் உள்ள இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டகிரேடிவ் நியூட்ரிஷனால் நடிகை ரம்யா ஒரு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளராக சான்றிதழ் பெற்று இருக்கிறார்.

பிட்னஸ் குறித்த டிப்ஸ்கள் :

தற்போது இவர் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழி நடத்துவதற்கும் தகுதியானவர். அதே போல் இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் உடல் எடை சம்பந்தமான பல குறிப்புகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தனது சமூக ஊடகத்தில் பிட்னஸ் தொடர்பான பல பதிவுகளை பகிர்ந்திருக்கிறார். அதே போல அடிக்கடி தன் பழைய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

Advertisement

தன் முதல் போட்டோ ஷூட் :

அந்த வகையில் ஜெயா தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான போது எடுத்த முதல் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் ரம்யா , அதில் 16 வயது பெண்ணாக நீங்கள் பார்க்கும் இடது படத்தில் இருக்கும் உணர்வுகள் இன்னும் நினைவில் உள்ளன. பயம், கூச்சம் மற்றும் கேமராவை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. நீங்கள் பார்க்கும் அந்த புன்னகை அனைத்தையும் கூறுகிறது.

Advertisement

அன்றும் இன்றும் ரம்யா :

அப்போது ஜெயா டிவியில் எனது முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது நான் அளித்த நேர்காணலுக்கு எனது புகைப்படங்களை அனுப்புமாறு ஒரு பத்திரிகையாளர் என்னிடம் கேட்டார்.எனவே, இந்த இரண்டு புகைப்படங்களுக்கிடையில் என்ன மாற்றம்? எனது உடல், எனது மனநிலை, எனது கருத்துக்கள் மற்றும் நான் யார் என்பது பற்றிய எனது முழுக் கண்ணோட்டம்.எந்தவொரு மாற்றத்திலும் ஒருவர் கடந்து வந்தவற்றில் அதிக சக்தி உள்ளது, அதனால்தான் அதை உரிமையாக்குவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement