தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல யூடுயூப் சேனலான வலைப்பேச்சி சேனலில் பேசியுள்ள சினிமா விமர்சகர் அனந்தன், ஆரம்பகாலத்தில் விஜய் சேதுபதியை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் ஒருவர் குறித்து பேசியுள்ளார். அதில் பேசியுள்ள அவர், ஒரு பிரபலமான தயாரிப்பாளர் ஆரம்பகாலத்தில் விஜய் சேதுபதியை அவமானப்படுத்தியதாக கூறிய அவர் அந்த தயாரிப்பாளர் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று படங்களை கூட தயாரிக்கக் கூடியவர் ஒரு சமயத்தில் அந்த தயாரிப்பாளர் படங்களை திரையரங்குகளில் வெளியீடு படு பிஸியாக இருந்த வந்தார் அந்த சமயத்தில் விஜய் சேதுபதி அந்த தயாரிப்பாளரை சந்திப்பதற்காக சென்றிருந்தார்.

Advertisement

அங்கே சென்று ஒரு இரண்டு மூன்று மணி நேரம் அந்த தயாரிப்பாளரை சந்திக்க காத்துக் கொண்டிருந்தார் விஜய் சேதுபதி அப்போது தயாரிப்பாளரை சந்தித்து பேசுவேன் அந்த தயாரிப்பாளர் உன்னுடைய முகத்தை போஸ்டரில் பார்த்தாள் கூட திரையரங்குகளில் ஒருவர்கூட உள்ளே வர மாட்டார்கள் என்று பேசி இருக்கிறார் இதனால் விஜய் சேதுபதி அந்த இடத்தை விட்டு எதுவும் பேசாமல் வந்து விட்டார் என்று கூறியுள்ளார் ஆனந்தன்.

பெரும்பாலும் வலைப்பேச்சு யூடுயூப் சேனலில் வெளியிடப்படும் இதுபோன்ற தகவல்கள் கொஞ்சம் உண்மைத்தன்மை கொண்டதாக தான் இருக்கும். சமீபத்தில் கூட போக்கிரி படத்தின் போது நெப்போலியனுக்கு விஜய்க்கு மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறி இருந்தார்கள். அதற்கு ஏற்றார் போல பேட்டி ஒன்றில் பங்கேற்ற நெப்போலியன். போக்கிரி படத்தின் போது விஜய்யுடன் ஏற்பட்ட மனஸதாபத்தால் விஜய்யுடன் பேசுவது இல்லை என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement