நீ நடிக்கவே வேண்டாம் கிளம்பு என்று வடிவேலுவை பாரதிராஜா படத்தில் இருந்து வெளியேற்றி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. மேலும், இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு படத்திலும் இவருடைய கதாபாத்திரம் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement

வடிவேலு திரைப்பயணம்:

மேலும், இவர் காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார் வடிவேலு. இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு போட்டது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் :

கடந்த ஆண்டு தான் இந்த பிரச்சனை தீர்ந்தது. தற்போது வடிவேலு படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சுராஜ் இயக்கி இருந்தார். லைகா புரோடக்சன் இந்த படத்தைதயாரித்து இருந்தது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் இந்த படம் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது இவர் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

வடிவேலுவை திட்டிய பாரதிராஜா:

இதனை அடுத்து தற்போது இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 வில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராதிகா, லட்சுமி மேனன், ரவி மரியா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வடிவேலுவை பாரதிராஜா திட்டி வெளியே அனுப்பி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகியிருந்த படம் கிழக்கு சீமையிலே.

Advertisement

பாரதிராஜா திட்ட காரணம்:

இந்த படத்தில் வடிவேலு நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதனால் இந்த படத்தில் வடிவேலு அதிக நாள் நடிக்க இருந்ததால் அதிக சம்பளம் கேட்டு இருந்தார். பின் இவர் நேரடியாக இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்து 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்டார். இதனால் டென்ஷனான பாரதிராஜா, நீ இந்த படத்தில் நடிக்கவே வேண்டாம். இடத்தை காலி பண்ணு என்று சொல்லிவிட்டார். அப்போ அந்த இடத்தில் இருந்து வருத்தத்தில் வடிவேலு வெளியே வந்து கிழக்கு சீமையிலே படத்தின் தயாரிப்பாளர் தாணுவை சந்தித்தார். உடனே தானு வடிவலுக்கு ஆறுதல் கூறி 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து அந்த படத்தில் நடிக்க வைத்தாராம்.

Advertisement