காசு இல்லாமல் தவித்த நேரத்தில் நாக சைதன்யா தான் உதவினார் என்று சமந்தா அளித்திருந்த பழைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார். மேலும், திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார்.

பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாகசைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். கடந்த ஆண்டு முழுவதும் இது குறித்து தான் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் சமந்தா அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார். பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தார்.

Advertisement

சமந்தா நடிக்கும் படங்கள்:

இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த புஸ்பா படத்தில் சமந்தா ஆடிய இருந்த ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ் ஆனது. இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட சமந்தா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதைத் தொடர்ந்து இவர் காத்துவாக்குல 2 காதல், திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சாகுந்தலம் ஆகிய பல படத்தில் சமந்தா நடித்து வருகிறார்.

சமந்தா அளித்த பழைய பேட்டி வீடியோ:

இருந்தாலும் இவர் அப்பப்ப வெளிநாட்டு பயணங்கள் சென்று கொண்டிருக்கின்றார். சமீபத்தில் நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து சுற்றுலா பயணத்திற்கு சென்று இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது சமந்தா பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்த நிலையில் சமந்தா அளித்த பழைய பேட்டி ஒன்றில் நாக சைதன்யா பற்றி பேசி இருக்கிறார். தற்போது அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். அந்த பேட்டியில் சமந்தா அவர்கள் கூறியிருப்பது,

Advertisement

நாக சைதன்யாவை பற்றி சமந்தா கூறியது:

சாய் ஒரு ஹஸ்பன்ட் மெட்டீரியல். என்னிடம் எதுவுமே இல்லாத காலத்தில் இருந்தே அவர் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் அமெரிக்காவில் இருக்கும் போது என் அம்மாவுக்கு போன் செய்ய காசு இல்லாமல் இருந்தேன். அப்போது அவரிடம் போன் வாங்கி தான் போன் செய்தேன். அந்த நிலையில் இருந்து தற்போது வரை அவர் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். மற்றவர்களுக்கு என்னைப்பற்றி பாதி தான் தெரிந்திருக்கும். ஆனால், சாய் என்னைப் பற்றி முழுமையாக அறிந்தவர்.

Advertisement

வைரலாகும் சமந்தா பழைய வீடியோ:

ஒரு மனிதனாக நான் செய்த மிக மிக மோசமான தவறுகளையும் அவர் பார்த்திருக்கிறார் என்று சமந்தா தன்னுடைய கணவனை பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார். இப்படி சமந்தா பேசியிருக்கும் பழைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கணவன், மனைவி இருவரும் இவ்வளவு நன்றாகப் புரிந்துகொண்ட பிறகு ஏன் விவாகரத்து முடிவு எடுத்தீர்கள்? இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. தயவுசெய்து இந்த முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement