சினிமா திரை உலகில் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் திரை உலகில் பிரபலமான இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமா திரையுலகிலும் இப்படி ஒரு தம்பதிகளா! என்று வியப்பூட்டும் வகையில் இவர்களுடைய திருமணம் நடந்தது. ரோஜா அவர்கள் ஜாதி, மதம், இனம் எல்லாத்தையும் தாண்டி தான் காதலித்தவரையே கரம் பிடிக்க 13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டார். ரோஜா அவர்கள் சினிமா துறையில் பிரபலமாக தொடங்கியவுடன் அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. இந்நிலையில் இயக்குனர் செல்வமணி படங்களை இயக்குவதில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.

இதனால், சினிமா துறையில் மார்க்கெட்டை இழந்து நின்றார் இயக்குனர் செல்வமணி. மேலும், இப்படி சினிமா துறையில் வாய்ப்பில்லாத இயக்குனரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? என ரோஜாவின் மனதை பல பேர் குழப்பியும், வேண்டாம் என்று வற்புறுத்தியும் வந்தார்கள். ஆனால், ரோஜா தனது காதல் மீதும், செல்வமணியின் மீதும் உறுதியான நம்பிக்கையை வைத்து இருந்தார். மேலும், அவர்களுடைய காதல் அனுபவங்களை பற்றி ரோஜா இடம் கேட்டபோது அவர் கூறியது, நான் தெலுங்கு, தமிழில் என பல இயக்குனர்களுடன் படங்களில் பணியாற்றினாலும் செல்வாவிடம் பணியாற்றிய அந்த அனுபவம் எனக்கு கிடைக்காது.

இதையும் பாருங்க : இந்த மூனு விஷயம் மட்டும் பண்ணிடாதான்னு சொன்னார் கண்ணதாசன் – வாலியே சொன்ன அறிய வீடியோ.

Advertisement

அழகாக காதலை சொன்ன செல்வமணி :

ஏனென்றால், செல்வாவின் நற்பண்புகளால் நான் மிகவும் கவரப்பட்டேன். அதுமட்டுமில்லாமல் என்னைப் பற்றி எனது அம்மாவிடமும், அண்ணனிடமும் அக்கறையுடனும், மிகக் பொறுப்புணர்வோடு பேசி வந்திருப்பார் செல்வமணி. இதனால் என் அம்மாவுக்கும், அண்ணனுக்கும் செல்வமணியை ரொம்ப பிடிக்க ஆரம்பித்துவிட்டது. எங்களுடைய காதலை செல்வமணி மிக அழகாக என் அம்மாவிடம் கூறினார். அவர் என்னிடம் எப்போதுமே போலவே தான் பழகி வந்தார். அதனால் செல்வமணி என் மீது வைத்த அக்கறையை பாசத்தையும் எல்லாம் தாண்டி பிரியம் உள்ளது என்பது அம்மாவுக்கு தெரிந்தது.

ஜாதி மதத்தை கடந்த திருமணம் :

பின் என் அம்மா நம் மகளுக்கு ஏற்றவர் இவர்தான் என முடிவு செய்து என் அண்ணனிடம் கேட்டார். என் அண்ணனும் எந்த ஒரு விருப்பு வெறுப்பும் இன்றி செய் செல்வாவுடன் என் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்கள். நாங்கள் ரெட்டி வம்சத்தினை சார்ந்தவர்கள். எங்கள் ஜாதியில் வேற ஒரு ஜாதி பெண்ணையும், மாப்பிள்ளையையும் பெரும்பாலும் எடுக்கமாட்டார்கள்,அதோடு திருமணம் செய்ய மாட்டார்கள். செல்வமணி முதலியார் வகுப்பு ஜாதியை சேர்ந்தவர். மேலும், அவருடைய நல்ல குணத்தாலும் அக்கறையாலும், நேர்மையான கொள்கையாலும் ஜாதிகளை எல்லாம் மீறி எங்களை கவர்ந்துவிட்டார் செல்வா.

Advertisement

13 ஆண்டு காத்திருந்த செல்வமணி :

பின் ஒருமுறை நான் ராஜமுந்திரி படப்பிடிப்பில் இருந்தேன். அன்றைக்கு என்னுடைய பிறந்த நாளும் கூட. ஆனால், செல்வா அங்கே வந்து திடீரென்று என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருக்கிறதா! என்று கூறினார். எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. நீ இப்போது ரொம்ப பிஸியான ஆர்டிஸ்ட் தான். உன் ஆசை தீரும் வரை படங்களில் நடி. எப்போது உனக்குப் படத்தில் நடிப்பது போதும் என்று தோன்றுகிறதோ, அப்போது சொல் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பேசினார். அவருடைய அந்த நேர்மையான பேச்சு எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. நானும் சம்மதம் தெரிவித்தேன். செல்வா எனக்காக 13 வருடம் காத்திருந்து இருந்தார்.

Advertisement

வயதை கேட்டு அதிர்ச்சியான ரோஜா :

நிஜமாகவே இப்படி ஒரு கணவர் கிடைக்க நான் மிகவும் கொடுத்திருக்க வேண்டும். எனக்காக 13 வருடம் காத்திருந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் என்னை திருமணம் செய்துகொண்டார் செல்வா. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள ரோஜா, திருமணத்திற்கு முன்னர் தான் இவரை வயது தெரியாமல் காதலித்துவிட்டேன் என்றும் திருமணத்தின் போது இவரது வயதை கேட்டு நான் இவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று சொன்னதாகவும் அதற்கு தன்னுடைய அக்கா ‘இதெல்லாம் முன்னாடியே நீ கேட்டு இருக்கனும், இப்ப சொல்லி என்ன ஆக போது’ என்று சொன்னதாகவும் வேடிக்கையாக கூறியுள்ளார்.

Advertisement