மேக்கப் ரூமில் பிரபல நடிகையுடன் கமல் இருப்பதை பார்த்து அவருடைய முதல் மனைவி கெஞ்சி அழுதிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட் சினிமாவில் உலக நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்திருக்கிறது. இவர் சினிமா உலகில் உச்சத்தில் இருந்தாலும் இவருடைய குடும்ப வாழ்க்கையில் பல சர்ச்சைகள் ஏற்பட்டு இருக்கிறது.

அதாவது, நடிகர் கமலஹாசன் அவர்கள் 1978 ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்திருந்தார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே ஆண்டில் இவர்கள் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். அதன் பின் 1988 ஆம் ஆண்டு பிரபல நடிகை சரிகாவை இரண்டாவது ஆக கமல் திருமணம் செய்து கொண்டார். இது அனைவரும் அறிந்ததே. கமலஹாசன் மற்றும் சரிகா தம்பதியினருக்கு பிறந்த மகள்கள் தான் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன்.

Advertisement

கமல் செய்த வேலை:

இதனை தொடர்ந்து கமல்-சரிகா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கமல்-சரிகா 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் கௌதமியுடன் திருமணம் செய்துகொள்ளாமல் 13 ஆண்டுகள் கமல் வாழ்ந்து வந்தார். பின்னர் அவரையும் பிரிந்தார் கமல். இப்படி கமலஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகள் இணையத்தில் வெளியாகி தான் வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகை உடன் மேக்கப் ரூமில் கமலஹாசன் இருந்திருக்கிறார்.

அழுது புலம்பிய வாணி:

இதை பார்த்த அவருடைய முதல் மனைவி வாணி கெஞ்சி அழுது இருக்கிறார். அதோடு வாணியை விவாகரத்து செய்வதற்கு முன்பே கமலஹாசன் அவர்கள் நடிகை சரிகாவுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் முதல் மனைவி வாணிக்கு வருத்தம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் கமலுடைய நெருங்கிய நண்பரும் இயக்குனருமான சந்தான பாரதியை சந்தித்து இதுகுறித்து கேட்டிருக்கிறார். அதன்பின் கமலுடைய அண்ணன் சந்திரகாசன் மற்றும் சந்தான பாரதி இருவரும் இணைந்து கமலை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக பேச போனார்கள்.

Advertisement

முதல் திருமணம் விவாகரத்து செய்ய காரணம்:

அப்போது கமல் இருவரையும் மேக்கப் போடும் ரூமுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சரிகாவை பார்த்து இருவருமே அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். என்ன சொல்வதென்று புரியாமல் அங்கிருந்து இருவருமே சென்று விட்டார்கள். பின் வாணி கணபதியை விவாகரத்து செய்துவிட்டு கமல் சரிகாவை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். என்ன இருந்தாலும் தன்னுடைய நண்பர் பக்கம்தான் நிற்பேன் என்றும், அவரை விட்டுக் கொடுக்க முடியாது என்றும் கமலுக்கு ஆதரவாக நின்று இருக்கிறார் சந்தான பாரதி. இதை சமீபத்தில் ஒரு பேட்டியிலேயே அவர் கூறியிருக்கிறார்.

Advertisement

கமல் திரைப்பயணம்:

கடந்த 2022 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூல் சாதனையும் செய்திருந்தது. தற்போது கமல் அவர்கள் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து ஹிந்தியில் ஒரு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கமல் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன்பின் மணிரத்தினம் இயக்கும் படத்திலும் கமல் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Advertisement