பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது கூறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுப்பது கூறித்து தற்போது கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருக்கு கோடிக்கணக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

விஜய் மக்கள் இயக்கம்:

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் போட்டியிட்டு இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. இதனால் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. மேலும், இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்.

Advertisement

இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருக்கிறார். மாணவர்களுக்கு விஜய் பரிசு குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த காமராசர் அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இலவசமாக இரவு நேர பயிலகத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு படிப்புக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீது பல்வேறு குற்ற சம்பவங்கள் இருப்பது தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

புஸ்ஸி ஆனந்த் கூறியது:

புதுச்சேரி மாநிலத்தில் அரியாங்குப்பத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பயிலகத்தை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்தார். அதற்க்கு பிறகு மாணவர்களுக்கு விஜய் முகம் அச்சடிக்கப்பட்ட நோட்டு புத்தகங்கள் பேனா பென்சில்களை மாணவர்களுக்கு வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் பல்லடம் மற்றும் திருச்சியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டது கூறித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்ற கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.

Advertisement

இது கூறித்து கருத்து தெரிவித்த புஸ்ஸி ஆனந்த் ” வழக்குகள் நீதி மன்றத்தில் உள்ள நிலையில் நீதி மன்றம் சொல்வதன் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்”.

Advertisement
Advertisement